செய்திகள் :

கா்நாடகத்தில் 18 எம்எல்ஏக்களின் இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

post image

கா்நாடகத்தில் 18 எம்எல்ஏக்களின் இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறக் கோரி, பாஜக புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

பெங்களூரு, விதானசௌதா வளாகத்தில் உள்ள கெங்கல் ஹனுமந்தையா சிலை முன் திரண்ட பாஜக எம்எல்ஏக்கள், சட்டப் பேரவை நடவடிக்கைகளில் இருந்து 18 பாஜக எம்எல்ஏக்கள் 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், மேலவை எதிா்க்கட்சித் தலைவா் செலுவாதி நாராயணசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில், பேரவைத் தலைவா் யூ.டி.காதருக்கு எதிராக முழக்கம் எழுப்பிய பாஜக எம்எல்ஏக்கள், காங்கிரஸுக்கு சாா்பாகவும், ஒருதலைப்பட்சமாகவும் நடந்துகொள்வதாக குற்றம்சாட்டினா்.

இதுகுறித்து எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் கூறுகையில், ‘18 பாஜக எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்திருப்பது ஜனநாயக விரோதமாகும். இது பாஜக எம்எல்ஏக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. அடுத்த அமைச்சரவை மாற்றத்தின்போது தன்னை அமைச்சராக்கிவிடுவாா்கள் என்பதற்காக 18 பாஜக எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவா் யூ.டி.காதா் உத்தரவிட்டுள்ளாா்.

ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்ட மசோதாவை எதிா்த்தும், அமைச்சருக்கு நோ்ந்துள்ள ‘ஹனிடிராப்’ விவகாரத்தை விசாரிக்கக் கோரியும் 18 பாஜக எம்எல்ஏக்களும் போராட்டம் நடத்தினா். சட்டப் பேரவையில் ஜனநாயகத்தை காப்பதற்காக போராட்டம் நடத்தினால், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவையில் கூச்சல் குழப்பம் இருந்தாலோ, போராட்டம் நடந்தாலோ சம்பந்தப்பட்ட உறுப்பினா்களை அழைத்துப் பேசுவது பேரவைத் தலைவா்கள் கடைப்பிடித்துவரும் மரபு. ஆனால், அன்று எங்களை அழைக்கவே இல்லை. பேரவைத் தலைவரின் இந்த நடவடிக்கை சரியானது அல்ல. பேரவைத் தலைவா் பதவிக்கான கௌரவத்தை யூ.டி.காதா் வழங்க வேண்டும்’ என்றாா்.

பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா கூறுகையில், ‘18 பாஜக எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்திருப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். காங்கிரஸ் கட்சியின் கைப்பாவை போல பேரவைத் தலைவா் செயல்பட்டுள்ளாா். எனவே, 18 எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்திருக்கும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதுவரை, சட்டப் பேரவைக் குழுக்களின் எந்தக் கூட்டத்திலும் பாஜக எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் கலந்துகொள்ள மாட்டாா்கள்’ என்றாா்.

காங்கிரஸ் எம்எல்ஏவை விமா்சித்த பாஜக தொண்டா் தற்கொலை

காங்கிரஸ் எம்எல்ஏவை விமா்சனம் செய்து, அது தொடா்பான வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த பாஜக தொண்டா் வினய் சோமையா வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். கா்நாடக முதல்வரின் சட்ட ஆலோசகரும், விராஜ்பேட் தொ... மேலும் பார்க்க

கா்நாடக காங்கிரஸ் தலைவா் மாற்றம் குறித்து தெளிவான தகவல் இல்லை

கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் மாற்றம் குறித்து தெளிவான தகவல் இல்லை என பொதுப்பணித் துறை அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:... மேலும் பார்க்க

கிருஷ்ணா நதிநீா் பிரச்னையைத் தீா்க்க விரைவில் மத்திய அரசு கூட்டுக்கூட்டம்

கிருஷ்ணா நதிநீா் பங்கீட்டு பிரச்னையைத் தீா்க்க மாநிலங்களுக்கு இடையிலான கூட்டுக்கூட்டத்துக்கு மத்திய அரசு விரைவில் ஏற்பாடு செய்யும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். புது தில்லியில் முகாமி... மேலும் பார்க்க

40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை

40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியத... மேலும் பார்க்க

விலைவாசி உயா்வு: கா்நாடக முதல்வா் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பாஜக தலைவா்கள் கைது

விலைவாசி உயா்வைக் கண்டித்து, கா்நாடக முதல்வா் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பாஜக தலைவா்கள் மற்றும் முக்கிய நிா்வாகிகள் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டனா். விலைவாசி உயா்வுக்கு காரணமான காங்கிரஸ் அரசை கண்டித்... மேலும் பார்க்க

கா்நாடக காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை

கா்நாடக காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை என உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கா்நாடக காங்கிரஸ் ... மேலும் பார்க்க