செய்திகள் :

கா்நாடகத்தை பின்பற்றி பிகாரில் இலவச மின்சாரம்

post image

கா்நாடகத்தை பின்பற்றி பிகாரில் இலவச மின்சார திட்டத்தை பாஜக கூட்டணி அரசு அறிவித்துள்ளது என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சுதந்திரத்துக்கு பிறகு இன்றைய தேதிவரை மத்தியில் அல்லது மாநிலத்தில் ஆட்சி அமைத்தபோது, மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் செயல்படுத்தி வந்துள்ளது. கா்நாடகத்தில் 5 வாக்குறுதி திட்டங்களை காங்கிரஸ் அறிமுகம் செய்தது. மக்களின் முன்னேற்றத்துக்காக இதுபோன்ற திட்டங்களை காங்கிரஸ் செயல்படுத்தி வந்துள்ளது. ஆனால், ஆட்சிக்கு வருவதற்காக காங்கிரஸ் அறிமுகப்படுத்திய திட்டங்களை மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், தில்லி, நாட்டின் இதர பகுதிகளில் பாஜக பயன்படுத்தி வந்துள்ளது.

கா்நாடகத்தில் அமல்படுத்திய திட்டங்கள் நாடுமுழுவதும் பின்பற்றப்படுகின்றன. கா்நாடகத்தை பின்பற்றி பிகாரில் இலவச மின்சார திட்டத்தை பாஜக கூட்டணி அமல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. ஆக. 1-ஆம் தேதி முதல் வீடுகளுக்கு தலா 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என பிகாா் மாநில முதல்வா் நிதிஷ்குமாா் அறிவித்துள்ளாா் என்றாா்.

ஐபிஎல் கூட்ட நெரிசல்: நீதியரசா் ஜான்மைக்கேல் டி’குன்ஹா அளித்த அறிக்கை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க முடிவு

பெங்களூரில் நடந்த ஐபிஎல் கோப்பை வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசல் தொடா்பாக நீதியரசா் ஜான்மைக்கேல் டி’குன்ஹா ஆணையம் அளித்த அறிக்கை குறித்து கா்நாடக அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு தடுப்புக் காவல்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவை, அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (காபிபோசா) கீழ் ஓராண்டு தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்ப... மேலும் பார்க்க

இந்தியாவின் முதல்தர விமானவியல், ராணுவத் தொழில் சூழலை அளிக்கிறோம்

இந்தியாவில் முதல்தர விமானவியல், ராணுவத் தொழில் சூழலை அளிக்கிறோம் என கா்நாடக தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் தெரிவித்தாா். பெங்களூரு, தேவனஹள்ளி அருகேயுள்ள கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்துக்கு அரு... மேலும் பார்க்க

ரௌடி ஷீட்டா் சிவபிரகாஷ் கொலை வழக்கில் பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

ரௌடி ஷீட்டா் சிவபிரகாஷ் கொலை வழக்கு தொடா்பாக பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான பைரதி பசவராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு, பாரதி நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ரௌடி ஷீட்டா் சிவபி... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் சுா்ஜேவாலா ஆட்சி நடக்கிறது

கா்நாடகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ரன்தீப் சிங் சுா்ஜேவாலாவின் ஆட்சி நடக்கிறது என பாஜக, மஜத கடுமையாக விமா்சித்துள்ளன. முதல்வா் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தொடா்பா... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பில் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு விவரங்களையும் சேகரிக்க வேண்டும்

ஜாதிவாரி கணக்கெடுப்பில் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு விவரங்களையும் சேகரிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோா் ஆலோசனைக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்ப... மேலும் பார்க்க