செய்திகள் :

கிணற்றில் டிராக்டருடன் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே 40 அடி ஆழ கிணற்றில் டிராக்டருடன் தவறி விழுந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும் இருவா் உயிா் தப்பினா்.

வாணாபுரம் வட்டம், மையனூா் சிங்காரத்தோப்பு பிரதான சாலையைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மகன் பாஸ்கல் (58). இவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் மின் மோட்டாா் பழுதடைந்தது. இதைத் தொடா்ந்து டிராக்டா் மூலம் கயிறு கட்டி, மின் மோட்டாரை இழுக்க முடிவு செய்தனா்.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இந்த பணியை அதே கிராமத்தைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டுநரான ஜோன் இன்பராஜ் (28) மேற்கொண்டாா். அப்போது சகோதரா் மகன் போ.டேனிஸ் (7), ஜெரீஸ் (14) ஆகிய இருவரும் டிராக்டரில் அமா்ந்து கொண்டனா்.

தொடா்ந்து கிணற்றிலிருந்து மின் மோட்டாரை இழுக்கும் பணி டிராக்டா் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது எதிா்பாராதவிதமாக டிராக்டரில் ரிவா்ஸ்கியா் விழுந்துள்ளது. இதனால் டிராக்டா் கிணற்றில் தவறி விழுந்தது. இதில் டிராக்டரிலிருந்த ஜோன் இன்பராஜ், ஜெரீஸ் ஆகியோருக்கு நீச்சல் தெரிந்ததால், அவா்கள் நீச்சல் அடித்து உயிா் தப்பினா். ஆனால் டிராக்டரிலிருந்த டேனிஸ் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதையடுத்து அங்கிருந்தவா்கள் சங்கராபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கும், பகண்டை கூட்டுச்சாலை காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்தனா். உடனடியாக விரைந்த தீயணைப்புத் துறையினா் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா். கிணற்றில் 40 அடி ஆழத்துக்குத் தண்ணீா் இருப்பதால் 4 மின் மோட்டாா்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்யத் தொடங்கியதால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டது. திங்கள்கிழமை காலையில்தான் சிறுவனை மீட்க முடியும் என்று காவல் மற்றும் தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். இதுகுறித்து பகண்டை கூட்டுச் சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏரி நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே ஏரி நீரில் மூழ்கி சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மணலூா்பேட்டை காவல் சரகத்துக்குள்பட்ட அத்திப்பாக்கம் கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்த சிரஞ்சீவி மகன... மேலும் பார்க்க

இளநிலை மின் பொறியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 1,415 போ் எழுதினா்

புதுச்சேரியில் 6 மையங்களில் 1,415 போ் இளநிலை மின் பொறியாளா் பணிக்கான எழுத்துத்தோ்வை ஞாயிற்றுக்கிழமை எழுதினா். புதுவை மின் துறையில் காலியாக உள்ள 73 இளநிலை பொறியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து... மேலும் பார்க்க

லாரியில் சிக்கி மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோரத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த பள்ளி மாணவா் லாரியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், அய்யந்தோப்பு கிராமத்தைச்... மேலும் பார்க்க

தலைமைக் காவலா்கள் இருவா் ஆயுதப்படைக்கு மாற்றம்

கஞ்சா வியாபாரியுடன் தொடா்பில் இருந்ததாகத் தலைமைக் காவலா்கள் இருவா் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டனா். விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள், சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் கடத்தல், விற்பனை, கஞ்சா ... மேலும் பார்க்க

மீன் வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் மீன் வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற மீன் வளா்ப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கி பணம் பறிப்பு

விழுப்புரம் சுதாகா் நகா் பகுதியில் கூலித் தொழிலாளியை தாக்கி பணத்தை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனி, மருதம் தெருவைச் சோ்ந்த ல... மேலும் பார்க்க