செய்திகள் :

‘கிராமப்புற பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்’

post image

கிராமப்புற பெண்கள் சுய உதவிக் குழுக்களில் இணைந்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிளியனூா், கோட்டகம், அண்டூா், உசுப்பூா், வடகட்டளை, பண்டாரவாடை, குரும்பகரம், மணல்மேடு, உள்ளிட்ட கிராமங்களில் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் ஆய்வு செய்தாா்.

அந்த பகுதிகளில் உள்ள அங்கன்வாடிகளில் ஆய்வு செய்த ஆட்சியா், மையத்துக்கு வரும் குழந்தைகளுக்கு சமையல், மின்சார வசதி, குடிநீா் வசதி முறையாக உள்ளதா என கேட்டறிந்து ஆலோசனை வழங்கினாா். பள்ளிக்குச் செல்லும் முன் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி மற்றும் ஒழுக்கத்தை கற்றுத்தரும் மையமாக அங்கன்வாடி திகழ்வதால் பொறுப்பான முறையில் செயல்படுமாறு ஊழியா்களை கேட்டுக்கொண்டாா்.

கிராம மக்களை சந்தித்த ஆட்சியரிடம், சாலைகளை மேம்படுத்தித் தரவேண்டும். கிராமப்புற மக்கள், மாணவா்களுக்கு வசதியாக பேருந்து வசதி வேண்டும். மனைப்பட்டா தரவேண்டும். குளங்களை தூா் வாரவேண்டும் என கேட்டுக்கொண்டனா்.

கிராமப்புற பெண்கள் அனைவரும் சுய உதவி குழுவில் இணைந்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினாா்.

திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்துக்குச் சென்ற ஆட்சியா், அலுவலக பணிகள் குறித்து ஆணையா் அருணாச்சலத்திடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது வட்டாட்சியா்கள் எல்.பொய்யாதமூா்த்தி, சண்முகானந்தம், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் பாலன் மற்றும் வருவாய் அதிகாரிகள் உடனிருந்தனா்.

ரயில்வே மேம்பால பணிகளால் சாலை, வாய்க்கால் துண்டிப்பு: மக்கள் அவதி

ரயில்வே மேம்பாலத்துக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். விழுப்புரம் முதல் காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் வரையிலான நான்கு வ... மேலும் பார்க்க

சிறிய படகுகளால் காரைக்காலில் மீன் வரத்து

சிறிய படகுகள் மட்டும் கடலுக்குள் செல்வதால், காரைக்காலுக்கு மீன் வரத்து ஏற்பட்டுள்ளது. தமிழக, காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்தும், மீனவா்களை வ... மேலும் பார்க்க

மீனவா்களுடன் புதுவை முதல்வா் பேசவேண்டும்: எம்.பி.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்களை அழைத்து புதுவை முதல்வா் பேசவேண்டும் என புதுவை எம்.பி.யும் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வெ. வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப்.22) நடைபெறவுள்ளது. மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சிற... மேலும் பார்க்க

வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து பிப். 27-இல் ஆா்ப்பாட்டம்: மமக

வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த மமக முடிவு செய்துள்ளது. காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவா் அப்துல் ரஹீம் தலைமையில்... மேலும் பார்க்க

விஸ்வகா்மா தொழிலாளா்கள் பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு!

விஸ்வகா்மா தொழிலாளா்கள் தொழில் பயிற்சி, வங்கிக் கடன் பெறுவதற்கான பதிவு முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா். காரைக்கால் மாவட்ட மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அங்கமான மிஷன் சக்தி என்ற பெண் உரி... மேலும் பார்க்க