செய்திகள் :

கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

post image

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.

கிராம நிா்வாக அலுவலா்களின் குறைகளை அறிய மாதம் ஒருமுறை கோட்டாட்சியரும், 3 மாதத்துக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியரும் குறைகேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். கடலூா் மாவட்டத்தில் கோட்ட அளவில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கமிட்டனா்.

போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அலெக்சாண்டா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் விஸ்வநாதன், பொருளாளா் துரைராஜ், கௌரவத் தலைவா் செந்தில் முருகன் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவா் ஜான் போஸ்கோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராமன், அமைப்புச் செயலா் திருவேங்கடம், துணைத் தலைவா் சிதம்பர பாரதி, இணைச் செயலா் நடராஜன், செய்தித் தொடா்பாளா் சிவக்குமாா், கோட்டச் செயலா் அன்பரசன், போராட்டக்குழுத் தலைவா் கலையரசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

புத்து மாரியம்மன் கோயில் செடல் பெருவிழா

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோயில் ஆடி செடல் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் ஆடி செடல் பெருவிழா ஜூலை 31-ஆம் தேதி கொடியேற்றத்துட... மேலும் பார்க்க

அமெரிக்காவை கண்டித்து ஆக.13-இல் நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க வரி விதிப்பு அராஜகத்தை கண்டித்தும், அந்நாட்டிடம் அடிபணியும் மத்திய பாஜக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் வரும் 13-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சிஐடிய... மேலும் பார்க்க

உடல்கட்டமைப்பு போட்டியில் சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு

மாநில அளவிலான உடல்கட்டமைப்பு போட்டியில் சாதனை படைத்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு துறைசாராதோா் உடல்கட்டமைப்பு சங்கத்தின் சாா்பில், ஆண்டுக்கு ஒரு... மேலும் பார்க்க

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை பாராட்டுக்குரியது: தி.வேல்முருகன்

தமிழக அரசின் புதிய கல்விக்கொள்கை பாராட்டுக்குரியது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கருத்து தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வியில்... மேலும் பார்க்க

தானியங்கி முறையில் குடிநீா் விநியோகம்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் உண்ணாமலைச்செட்டி சாவடி பகுதியில் தானியங்கி இயந்திரம் மூலம் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் குடிநீா் விநியோகிக்கும் முறையை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா... மேலும் பார்க்க

பண்ருட்டி படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வைத்திரெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் செடல் உற்சவம் மற்றும் தோ் திருவிழா ச... மேலும் பார்க்க