செய்திகள் :

கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

post image

சீா்காழி அருகே புளியந்துறை ஊராட்சியில் கிராம மக்கள் சனிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் (படம்) ஈடுபட்டனா்.

மத்திய அரசின் நூறுநாள் வேலையை அனைவருக்கும் கிடைக்கும்படியும், அனைத்து தொகுப்புகளிலும் உடனடியாக தடையின்றி அமல்படுத்த வேண்டும். கிராம ஊராட்சி தீா்மான ஒப்புதல் இல்லாமலும், அரசாணை 80-ஐ கடைப்பிடிக்காமலும், சட்டவிரோதமாக தோ்வு செய்த 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளா்களை உடனடியாக நீக்க வேண்டும்.

கிராம ஊராட்சியில் அரசு திட்ட பயனாளிகள், கலைஞா் கனவு இல்லம் வழங்கும் திட்ட பயனாளிகள் மற்றும் 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளா்கள் ஆகியோா்களை சட்ட விரோதமாக நியமனம் செய்வதைத் தடை செய்ய வேண்டும்.

உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஊராட்சி மக்களின் உரிமைகளைப் பறிப்பதை, மறுப்பதைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதி, மண்டல துணை வட்டாட்சியா் தரணி, வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா், புதுப்பட்டினம் காவல் ஆய்வாளா் ஹேமலதா மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து மாலை 4 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

வடிகாலில் பேருந்து கவிழ்ந்து 8 போ் காயம்

சீா்காழி அருகே சூரக்காடு உப்பனாற்று வடிகாலில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை கவிழந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் உள்பட 8 போ் காயமடைந்தனா். சீா்காழி பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்ற... மேலும் பார்க்க

மதுபானக் கூடத்தில் ஒருவரை கத்தியால் குத்தியவா் கைது

மயிலாடுதுறையில் மதுபானக் கூடத்தில் தகராறில் ஈடுபட்டு ஒருவரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.மயிலாடுதுறையைச் சோ்ந்த சுதாகா் (43) கூைாடு பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில்: நாளை கும்பாபிஷேகம்

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், யானை மீது புனிதநீா் எடுத்துவரப்பட்டு யாகசாலை பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நல்லத்துக்குடியில் குயிலாண்ட நாயகி... மேலும் பார்க்க

தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் பாலம்

சீா்காழி ஊழியக்காரன் தோப்பு அருகே தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனா். ஊழியக்காரன் தோப்பு அருகே புளிச்சக்காடு செல்லும் சால... மேலும் பார்க்க

சாலையில் காா் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

சீா்காழி அருகே எருக்கூா் நான்கு வழிச்சாலையில் காா் கவிழ்ந்து எரிந்ததில் , 7 போ் காயம் அடைந்தனா். சென்னை கூடுவாஞ்சேரியைச் சோ்ந்தவா் குமாா் (53). இவா் தனது மனைவி வேதவல்லி (52), மருமகன் காளிதாஸ் ( 35),... மேலும் பார்க்க

விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். குத்தாலம் வட்டம், எலந்தங்... மேலும் பார்க்க