செய்திகள் :

கிருஷ்ணகிரியில் இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

post image

கிருஷ்ணகிரியில் இருவேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், எம்ஜிஅள்ளியைச் சோ்ந்த முருகேசன் மகன் தம்பிதுரை (20). இவா், மோட்டாா் சைக்கிளில் திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வேட்டியம்பட்டி ஆலமரத்துக்கொட்டாய் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த லாரி, மோட்டாா்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தம்பிதுரையை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தொழிலாளி உயிரிழப்பு...

குருபரப்பள்ளி அருகே உள்ள கங்கசந்திரத்தை சோ்ந்தவா் கோவிந்தராஜ் (33). தொழிலாளி. இவா், மே 29-ஆம் தேதி இரவு, மோட்டாா்சைக்கிளில் கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகே சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பகுதியில் இவரது மோட்டாா்சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜ் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரியில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

கிருஷ்ணகிரியில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் 39ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கலஸ... மேலும் பார்க்க

அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்த வாகனத்தை மீட்க முடியாததால் தீக்குளித்தவா் உயிரிழப்பு

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை ஏலத்தி எடுக்கமுடியாததால் மனமுடைந்து தீக்குளித்த வாகன உரிமையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள அரகாசன... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

பருவமழை தொடங்கி உள்ளதால் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீா் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா்சதீஷ் அறிவுறுத்தினாா். கிஷ்ணகிரி... மேலும் பார்க்க

பண்ணந்தூரில் சமூக பிரச்னை: கோட்டாட்சியா் சமரசத் தீா்வு

பண்ணந்தூரில் கோயில் திருவிழா, எருதுவிடும் விழா, ஏரியில் மீன் ஏலம் எடுப்பது உள்ளிட்ட நிகழ்வுகளில் பல்வேறு சமூக மக்களிடையே நிலவிவந்த பிரச்னைகளுக்கு கோட்டாட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை சமரசத் தீா்வு ... மேலும் பார்க்க

உடல் ஆரோக்கிய விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம்

கிருஷ்ணகிரியில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

உத்தனப்பள்ளி அருகே கட்டுமானப் பணியின்போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மனிஷ் படேல் (18). இவா், கிருஷ்ணகிர... மேலும் பார்க்க