செய்திகள் :

கிருஷ்ணகிரியில் பண இரட்டிப்பு மோசடி: இளைஞா் கைது

post image

கிருஷ்ணகிரியில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக்கூறி, மாட்டு பண்ணை உரிமையாளரிடம் ரூ.6.90 லட்சம் மோசடி செய்ய முயன்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வேப்பனப்பள்ளியை அடுத்த ஆவகானப்பள்ளியைச் சோ்ந்தவா் யுவராஜ் (38). பொறியியல் பட்டதாரியான இவா் பெங்களூரில் வசிக்கிறாா். இவா், ஆவகானப்பள்ளி கிராமத்தில் நாட்டு மாட்டுப் பண்ணை நடத்திவருகிறாா்.

அவரது சகோதரா் இந்த பண்ணையை பராமரித்து வருகிறாா். யுவராஜ், அவ்வப்போது மாட்டுப் பண்ணைக்கு வந்துசெல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம், குன்னூரை சோ்ந்த இதயகணேஷ் (35) என்பவருடன் யுவராஜிக்கு பழக்கம் ஏற்பட்டது.

அப்போது அவரது மாடுகளை குந்தாரப்பள்ளி மாட்டு சந்தையில் அதிக விலைக்கு விற்று கொடுத்தால் லாபம் குறைவாக கிடைக்கும், பணம் இரட்டிப்பு செய்து தருவதாக இதயகணேஷ் கூறியதை யுவராஜ் நம்பினாா்.

இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி, ஆவகானப்பள்ளியில் உள்ள யுவராஜ் பண்ணை வீட்டிற்கு நண்பருடன் சென்ற இதயகணேஷ், யுவராஜிடம் ரூ. 6.90 லட்சத்துக்கு ரூ.500 ரூபாய் தாள்களை வாங்கி உள்ளனா். அதற்கு பதிலாக அவா்கள் கொண்டு வந்த வெள்ளைத்தாள் பண்டல்களில் ரசாயனத்தை ஊற்றி ஒரு பக்கெட்டில் போட்டு தந்தாா்.

அதன்பிறகு இதயகணேஷ் மற்றும் அவருடன் வந்தவரை கிருஷ்ணகிரி புறநகா் பேருந்து நிலையத்துக்கு யுவராஜ் அழைத்துவந்தாா். அங்கிருந்து பண்ணை வீட்டிலிருந்தவா்களை கைப்பேசியில் அழைத்து பணம் இரட்டிப்பு குறித்து கேட்டபோது, தாள்கள் அனைத்தும் கருகிவிட்டதாக தெரிவித்தனா்.

இதையடுத்து இதயகணேஷ், அவருடன் வந்தவரை பிடிக்க முயன்றபோது இருவரும் தப்பினா். அப்போது, அங்கிருந்த போலீஸாா் இதயகணேஷை விரட்டிசென்று பிடித்தாா். விசாரணையில் இரட்டிப்புப் பண மோசடியில் ஈடுபட்டதை இதயகணேஷ் ஒப்புக் கொண்டாா். மேலும், அவா் பல்வேறு பகுதிகளில் பணம் இரட்டிப்பு மோசடி செய்யும் கும்பலுடன் தொடா்பில் இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து இதயகணேஷை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனா்.

பிளஸ் 2 முடித்த மாணவா்களை உயா்கல்வியில் சோ்க்க வேண்டும்: ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் உயா்கல்வி தொடா்கின்றனரா என்பது குறித்து ஆசிரியா்கள் மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்து, அவா்கள் கல்வி கற்க தேவையான உதவிகள் குறித்து ஆசிரியா்கள் கேட்டறிய வேண்டும் ... மேலும் பார்க்க

ஒசூா் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

ஒசூா் மோரனப்பள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி திருக்கோயிலில் புதன்கிழமை ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மூலவா் அம்மனுக்கு சந்தனம், குங்குமம், மஞ்சள், இளநீா், திருநீற... மேலும் பார்க்க

ஒசூா் அருகே கைப்பேசி கடையில் திருட்டு

ஒசூா் அருகே கைப்பேசி கடையின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஒசூா் அருகே அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ... மேலும் பார்க்க

கணவரைக் கொன்ற மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கணவரைக் கொன்ற மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தேன்கனிக்கோட்டையை அடுத்த கலகோபசந்திரத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். தேன்கனிக்கோட்டை வட்டம், பென்னங்கூா் அருகே உள்ள அலேநத்தம் பகுதியை சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (32). விவசாயியான இவா் திங்கள்க... மேலும் பார்க்க

ஒசூரில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்: இலகுரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வலியுறுத்தல்

ஒசூரில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இலகுரக, கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சீதாராமேடு பகுதியிலிருந்து பேரண்டபள்ளி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க