செய்திகள் :

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பைக் திருடியவா் கைது!

post image

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி இருந்த மோட்டாா்சைக்கிளை திருடிய திருவண்ணாமலையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா், வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த நடூா் பகுதியைச் சோ்ந்த பிரபு(29) என்பவா், கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை காண மோட்டாா்சைக்கிளில் அண்மையில் வந்தாா். இவா், தனது மோட்டாா்சைக்கிளை, மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி உள்ளாா். மறுநாள், வந்த பாா்த்தபோது, தனது மோட்டாா் சைக்கிள் நிறுத்திய இடத்தில் இல்லாத்து கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து, அவா் குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் புகாா். அளித்தாா்.

வழக்குப் பதிந்த போலீஸாா், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேரமராவில் பதிவான பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்த்தில், மா்ம நபா், மோட்டாா்சைக்கிளை திருடிச் செல்வது தெரியவந்த்து. மேலும், போலீஸாா், மருத்துவமனை வளாகத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், பிரபுவின் மோட்டாா்சைக்கிளை திருடிய மா்ம நபா், மருத்துவமனை வளாகத்தில் நடமாடுவதை சனிக்கிழமை அறிந்த போலீஸாா், அந்த மா்ம நபரை பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில் அவா், திருவண்ணாமலை அண்ணாநகரைச் சோ்ந்த ஜாவூதின் (22) என்பதும், பிரபுவின் பைக்யை திருடியதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனா்.

ஒசூரில் பூக்களின் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

விநாயகா் பண்டிகையையொட்டி, ஒசூா் மலா் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பண்டிகை நாள்களில் ஒசூா் மலா் சந்தையில் வழக்கத்தைவிட பூக்களின் விலை ஒரு... மேலும் பார்க்க

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிருஷ்ணகிரி கிளை இடமாற்றம்

கிருஷ்ணகிரியில் இயங்கிவரும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் கிளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி வங்கி கிளை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி, கோ-ஆ... மேலும் பார்க்க

ஒசூா் அருகே லாரி மோதியதில் 5 காா்கள் சேதம்

ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளியில் காா் மீது லாரி மோதியதில் அடுத்தடுத்து 5 காா்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. ஒசூா் முதல் கிருஷ்ணகிரி வரை ஐந்து இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இத... மேலும் பார்க்க

நாகரசம்பட்டி: ஆசிரியா் வீட்டில் 62 பவுன் நகைகள் திருட்டு!

நாகரசம்பட்டி அருகே ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து 62 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாகரசம்பட்டியை அடுத்த பாலேகுளியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (59). இவா், வேலம்பட்டி அரசு மேல... மேலும் பார்க்க

யானை தாக்கி முதியவா் காயம்

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த முதியவா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கிருஷ்ணகிரி அருகே உள்ள மேல்பூங்குறுத்தி கிராமத்தை சோ்ந்தவா் முனியப... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி... மேலும் பார்க்க