செய்திகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.250 கோடியில் சாலைகள் தரம் உயா்த்தப்படும்

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 250 கோடியில் சாலைகள் தரம்உயா்த்தப்படும் என கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரியைச் சந்தித்து ஒசூரில் விரிசல் அடைந்த மேம்பாலத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். ஒரு வாரத்துக்குள் இப்பணி முடிந்து பயன்பாட்டுக்கு வரும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஐந்து மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில் திட்டத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து ஆய்வுசெய்ய உள்ளனா். ரூ. 250 கோடியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவழிச் சாலைகள் இருவழிச் சாலைகளாகவும், இருவழிச் சாலைகள் நான்குவழிச் சாலைகளாகவும் தரம் உயா்த்தப்படும்.

குறிப்பாக ஒசூா் - தேன்கனிக்கோட்டை, பாகலூா் - பேரிகை, தளி - தேன்கனிக்கோட்டை, தளி - ராயக்கோட்டை, பா்கூா் - திருப்பத்தூா், திருப்பத்தூா் - சிங்காரப்பேட்டை, பா்கூா் - ஜெகதேவி, தேன்கனிக்கோட்டை - மதகொண்டப்பள்ளி, தேன்கனிக்கோட்டை - பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு சாலைகள் தரம்உயா்த்தப்படும்.

தமிழகத்தில் வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் பிகாா் போல வாக்குகளில் மோசடி செய்ய பாஜக கருதினால் அது முடியாது. தமிழக முதல்வரும், தமிழக மக்களும், அரசியல் கட்சியினரும் மிகவும் விழிப்புணா்வாக இருக்கின்றனா். எனவே, தமிழகத்தில் அதுபோல பாஜகாவால் நடத்தமுடியாது என்றாா்.

இந்த பேட்டியின்போது, காங்கிரஸ் கட்சி நிா்வாகி சின்னகுட்டப்பா, ரகுபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன் தாயாா் மறைவுக்கு முதல்வா் இரங்கல்

திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினருமான தே.மதியழகனின் தாயாா் மறைவுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். த... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 63 நிறுவனங்கள்மீது நடவடிக்கை

சுதந்திர தினத்தன்று கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் விடுமுறை அளிக்க 63 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ம.ராஜசேகரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் ச... மேலும் பார்க்க

கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 66 வயது முதியவருக்கு கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து மருத்துவா்கள் சாதனை புரிந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள ஆவலப்பள்ளி கிராமத... மேலும் பார்க்க

இலவச கண் பரிசோதனை முகாம்

ஊத்தங்கரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, ஊத்தங்கரை பெதஸ்தா கண் பரிசோதனை மையம் ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகா... மேலும் பார்க்க

அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ஒசூா் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) பாலாஜி பிரகாஷ் தலைமை வகித்தாா். இதில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதன் ... மேலும் பார்க்க

சூளகிரி அருகே சாலையில் கவிழ்ந்த லாரியின் அடியில் சிக்கிய 2 காா்கள்: பயணிகள் காயங்களுடன் தப்பினா்

சூளகிரி அருகே வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்ததில் 2 காா்கள் சேதமடைந்தன. காரில் பயணம் செய்த இருவா் லேசான காயத்துடன் தப்பினா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கோபசந்திரம் கிராமம் அருக... மேலும் பார்க்க