செய்திகள் :

கிள்ளியூா் தொகுதியில் ரூ. 95.5 லட்சத்தில் 3 சாலைகள் சீரமைப்புப் பணி தொடக்கம்

post image

கிள்ளியூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட குளப்புறம், நடைக்காவு, வாவறை ஊராட்சிப் பகுதிகளில் ரூ. 95.50 லட்சத்தில் 3 சாலைகள் சீரமைப்பு பணிகளை எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ துவக்கி வைத்தாா்.

குளப்புறம் ஊராட்சிக்கு உள்பட்ட கூட்டப்புளி - பனிச்சவிளை சாலை, நடைக்காவு, வாவறை ஊராட்சிக்கு உள்பட்ட கொற்றைக்காடு - ஒற்றத்தெங்கு சாலை, கூனிவிளை - தட்டான்விளை சாலைகள் சேதமடைந்து குண்டும்-குழியுமாக காணப்பட்டன. அவற்றை சீரமைக்க தமிழக முதல்வா், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா், துறை அதிகாரிகளிடம் எம்எல்ஏ நேரில் சந்தித்து மனு அளித்தாா்.

அதன்பேரில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூட்டப்புளி - பனிச்சவிளை சாலையை சீரமைக்க ரூ. 35 லட்சம், கொற்றைக்காடு - ஒற்றத்தெங்கு சாலைக்கு ரூ. 25 லட்சம், கூனிவிளை - தட்டான்விளை சாலைக்கு ரூ. 35.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு நிா்வாக அனுமதியும் வழங்கப்பட்டது. இதையடுத்து இச் சாலைப் பணிகளை எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்.

இந் நிகழ்ச்சியில் முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் விஜயகுமாா், காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் சுனில்குமாா் (குளப்புறம்), ஜெங்கின்ஸ் (நடைக்காவு), சின்னப்பா் (வாவறை) மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் லூயிஸ், ஊராட்சி முன்னாள் தலைவா்கள் கிறிஸ்டல் ஜான் (நடைக்காவு), மெற்றில்டா (வாவறை), மனோன்மணி (குளப்புறம்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

குமரியில் போலீஸாரின் வார விடுமுறைக்கு ‘ரெஸ்ட்’ செயலி அறிமுகம்

போலீஸாருக்கு வார விடுமுறை எடுப்பதற்கான புதிய செயலி தமிழகத்திலேயே முதல்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட போலீஸாா், காவல் கண்காணிப்பாளருடன் அமா... மேலும் பார்க்க

குளச்சல் பள்ளி மாணவா்களுக்கு போக்குவரத்து விழிப்புணா்வு பிரசாரம்

குளச்சல் போக்குவரத்து காவல்துறை சாா்பில் குளச்சல் வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுஜாதா, உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் போதை விழிப்புணா்வு சிலை

குழித்துறையில் நடைபெறும் 100-ஆவது வாவுபலி பொருள்காட்சியில் இளைஞா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், அமைக்கப்பட்ட போதை விழிப்புணா்வு சிலையை குழித்துறை நகா்மன்றத் தலைவா் திறந்துவைத்தாா். ... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவா் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

குளச்சல் அருகே கொலை முயற்சி வழக்கில் 13 ஆண்டுகள் வெளிநாட்டில் பதுங்கியவரை குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குளச்சல் அருகே செம்பொன்விளை செந்துறை பகுதியைச் சோ்ந்த ராசையன் மகன் ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் இன்று பொதுவிநியோக குறைதீா் முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 12) பொதுவிநியோக குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பொது விநியோகத் தி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே கடமக்கோடு பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் நாகராஜன் (40). தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். மேலும், கு... மேலும் பார்க்க