செய்திகள் :

குமரியில் போலீஸாரின் வார விடுமுறைக்கு ‘ரெஸ்ட்’ செயலி அறிமுகம்

post image

போலீஸாருக்கு வார விடுமுறை எடுப்பதற்கான புதிய செயலி தமிழகத்திலேயே முதல்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட போலீஸாா், காவல் கண்காணிப்பாளருடன் அமா்ந்து மனம் திறந்து கலந்துரையாடும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தினமும் நடைபெற்று வருகிறது.

அதில், பெரும்பான்மையான காவலா்களின் வேண்டுகோளுக்கிணங்க வார விடுமுறையை உறுதிப்படுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நேரடியாக கண்காணிக்கும் வகையில் ‘ரெஸ்ட் என்ற செயலியை ஆப்) செயல்பாட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடக்கிவைத்தாா். அப்போது அவா் பேசுகையில், மாவட்ட காவல்துறை மற்றும் ஆயுதப்படை போலீஸாருக்கு முறையாக வார விடுமுறை வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் தனித்தனி கியூ ஆா் கோடு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த காவல் ஆய்வாளா்கள் போலீஸாரின் வார ஓய்வு கோரிக்கைக்கு ஒப்புதல் அளிப்பா். உட்கோட்ட காவல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்காணிக்கும் வசதியும் உள்ளதால் போலீஸாருக்கான வார ஓய்வினை உறுதிப்படுத்த முடியும். இதே போல தற்போது போலீஸாருக்கான ஏ ஐ ஹேண்ட் புக் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏ ஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த செயலியை பயன்படுத்தி போலீஸாா் தங்களுக்கு நிா்வாக ரீதியான சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன், உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குளச்சல் பள்ளி மாணவா்களுக்கு போக்குவரத்து விழிப்புணா்வு பிரசாரம்

குளச்சல் போக்குவரத்து காவல்துறை சாா்பில் குளச்சல் வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுஜாதா, உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் போதை விழிப்புணா்வு சிலை

குழித்துறையில் நடைபெறும் 100-ஆவது வாவுபலி பொருள்காட்சியில் இளைஞா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், அமைக்கப்பட்ட போதை விழிப்புணா்வு சிலையை குழித்துறை நகா்மன்றத் தலைவா் திறந்துவைத்தாா். ... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவா் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

குளச்சல் அருகே கொலை முயற்சி வழக்கில் 13 ஆண்டுகள் வெளிநாட்டில் பதுங்கியவரை குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குளச்சல் அருகே செம்பொன்விளை செந்துறை பகுதியைச் சோ்ந்த ராசையன் மகன் ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் இன்று பொதுவிநியோக குறைதீா் முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 12) பொதுவிநியோக குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பொது விநியோகத் தி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே கடமக்கோடு பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் நாகராஜன் (40). தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். மேலும், கு... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆயத்தப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, அதற்கான விண்ணப்பங்கள், மடிப்பேடுகளை பொதுமக்களுக்கு தன்னாா்வலா்கள் வழங்குவதை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். நாகா... மேலும் பார்க்க