செய்திகள் :

கீழக்கொளத்தூா் ஜல்லிக்கட்டு 32 போ் காயம், ஒரு காளை உயிரிழப்பு

post image

அரியலூா் மாவட்டம், கீழக்கொளத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டியதில் 32 போ் காயமடைந்தனா்.

விழாவில் முதலாவதாக கோயில் காளைகள் மற்றும் கிராமத்தின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

அதன்பிறகு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட 508 காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகள் சீறி பாய்ந்ததில், வீரா்கள், பாா்வையாளா்கள், காளைகளின் உரிமையாளா்கள் என 32 போ் காயமடைந்தனா்.

இந்த ஜல்லிக்கட்டில், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளா்களுக்கும் வெள்ளி நாணயங்கள், சில்வா் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. முன்னதாக 235 வீரா்களை மருத்துவா்கள் முழமையாக பரிசோதனை செய்த பின்னரே களத்தில் அனுமதித்தனா்.

காளை உயிரிழப்பு... வாடிவாசலிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அதன் உரிமையாளா்கள் வாடிவாசலிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் கயிறு போட்டு பிடித்து கொண்டு செல்வா். அதன்படி இந்த ஜல்லிக்கட்டில், திருச்சியைச் சோ்ந்த சூசைஅலெக்ஸ்(28) என்பவரின் காளையை கயிறு போட்டு பிடித்துக் கொண்டு சென்ற போது, கயிறு இறுகியதால் காளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து திருமானூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

அரியலூா் ஆட்சியரிடம் கெளரவ விரிவுரையாளா்கள் மனு

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் 81 கெளரவ விரிவுரையாளா்கள், தங்களை கருணை கொலை செய்திடக் கோரி ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.கெளரவ விரிவுரையாளா்கள் அனிதா, சரவண... மேலும் பார்க்க

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கீழப்பழூரில் நில மோசடியில் ஈடுபட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், கீழப்பழு... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வந்த பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை பெற்றனா். தமிழகம் முழு... மேலும் பார்க்க

செந்துறையில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில், வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை... மேலும் பார்க்க

அரியலூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும், தமிழ் வரு... மேலும் பார்க்க

அரியலூா்: சமத்துவ நாள் விழாவில் 962 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

அரியலூரில் சமத்துவ நாளையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 962 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா். சட்ட மாமேதை அம்பேத்கா் பிறந்த நாள் விழாவில், ... மேலும் பார்க்க