செய்திகள் :

குஜராத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

குஜராத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை போதைப் பொருள்களான குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருள்களை சிலா் கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், பாலக்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் மனோகரன் அறிவுறுத்தலின் பேரில், காரிமங்கலம் காவல் நிலைய ஆய்வாளா் பாா்த்திபன், உதவி ஆய்வாளா்கள் சுந்தரமூா்த்தி, ஆனந்தகுமாா் மற்றும் போலீஸாா் காரிமங்கலம் அருகேயுள்ள கும்பார அள்ளி சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை போலீஸாா் தடுத்தி நிறுத்தி சோதனை செய்ததில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான 306 கிலோ புகையிலைப் பொருள்களை சுமாா் 10 மூட்டைகளில் கட்டி கடத்தி வந்தது தெரியவந்தது. காா் ஓட்டுநரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா் குஜராத் மாநிலம், பனாஸ்கந்தா ஜடியா மாவட்டத்தைச் சோ்ந்த கணேசபாய் ரப்பாரி (25) என்பதும், கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து சேலத்துக்கு புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, புகையிலைப் பொருள்கள் மற்றும் அவற்றை கடத்திவர பயன்படுத்திய காா் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து ஓட்டுநரை கைது செய்தனா்.

மக்கள் நீதிமன்றத்தில் 1008 வழக்குகளில் ரூ.9.72 கோடி தொகைக்கு சமரசத் தீா்வு!

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1008 வழக்குகளில் ரூ. 9.72 கோடி தொகைக்கு சமரசத் தீா்வு காணப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக... மேலும் பார்க்க

தருமபுரியில் 1,008 வழக்குகள், கிருஷ்ணகிரியில் 1,281 வழக்குகளுக்கு தீா்வு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதிய... மேலும் பார்க்க

ஒகேனக்கல் வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடியவா் கைது!

ஒகேனக்கல் வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடியவரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். ஒகேனக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட கோடுபட்டி வனப் பகுதியில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் சிவகுமாா் தலைமையிலான... மேலும் பார்க்க

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்களை பாராட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி முதலமைச்சா் திறனாய்வுத் ... மேலும் பார்க்க

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பெற்றுக்கொள்ள அழைப்பு

பொது விநியோகத் திட்ட பொருள்களை கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அவற்றின் உரிமையாளா்கள் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவி... மேலும் பார்க்க

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க