செய்திகள் :

குஜராத் முதல்வா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

post image

குஜராத் முதல்வா் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து குஜராத் மாநில போலீஸாா் மேலும் கூறியதாவது: காந்திநகரில் உள்ள குஜராத் முதல்வா் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மா்ம நபா் ஒருவா் கடந்த ஜூலை 17-ஆம் தேதி மின்னஞ்சல் அனுப்பினாா். இதைத்தொடா்ந்து, அன்றைய தினமே காந்திநகா் போலீஸாா் ,முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டை கண்டறிந்து அப்புறப்படுத்தும் குழுவினா் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வா் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அச்சுறுத்தும் வகையில் எந்தவொரு பொருளும் கண்டறியப்படவில்லை. இதன்மூலம், வெடிகுண்டு மிரட்டல் செய்தி புரளி என தெரியவந்தது. இதையடுத்து, மின்னஞ்சல் அனுப்பிய மா்ம நபா் மீது பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றனா்.

கடந்த சில தினங்களுக்கு முன் குஜராத்தில் உள்ள சில பள்ளிகள், விசாரணை நீதிமன்றங்கள் மற்றும் குஜராத் உயா் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னா் அவை அனைத்தும் புரளி எனத் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!

மக்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றுமுதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடர் நடை... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: நாட்டின் ராணுவ வலிமையை உலக நாடுகளே வியந்தன - பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம், நமது நாட்டின் ராணுவ வலிமையைக் கண்டு உலக நாடுகளே வியந்தன என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இன்று தொடங்கி, ஆக... மேலும் பார்க்க

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.முதல் நாள் கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச... மேலும் பார்க்க

மும்பை ரயில் குண்டுவெடிப்பு: 12 பேர் விடுதலை!

மும்பை: 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மும்பை ரயிலில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது; அரசுத் தரப்பு குற்றத்தை நிரூபிக்க 'முற்றிலும் தோ... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறால் 40 நிமிடங்கள் வானிலே வட்டமடித்த விமானம் !

திருப்பதி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இன்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 40 நிமிடங்கள் நடுவானில் வட்டமடித்துள்ளது.ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து ஹைதராபாத்திற்கு நேற்று இரவு 7.55... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் கீழடி அகழாய்வு குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்... மேலும் பார்க்க