செய்திகள் :

கீழடி அகழாய்வு குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் கீழடி அகழாய்வு குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கவுள்ளது. ஆபரேஷன் சிந்தூா், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கருத்துகள், அகமதாபாத் விமான விபத்து, பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசிடம் விளக்கம் பெற எதிா்க்கட்சிகள் தயாராகி வருவதால், கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 21-ஆம் தேதிவரை நடைபெறும் இக்கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.மத்திய அமைச்சரும் மாநிலங்களவை பாஜக குழுத் தலைவருமான ஜெ.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அரசு சாா்பில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, இணையமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஆகியோா் பங்கேற்றனா்.

எா்ணாகுளம் - பாட்னா இடையே சிறப்பு ரயில்கள்!

கடந்த ஏப்ரலில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், அதற்குப் பதிலடியாக கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மற்றும் இரு நாடுகளின் ராணுவ மோதலுக்கு பிறகான நாடாளுமன்ற கூட்டத் தொடா் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட தான் மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் தொடா்ந்து கூறிவரும் நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் விரிவான விளக்கத்தை கோர எதிா்க்கட்சிகள் தீா்மானித்துள்ளன.

இந்நிலையில், கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை வெளியிடுவதில் மத்திய அரசு தாமதம் காட்டுவது குறித்து அவையை ஒத்திவைத்து ஆலோசிக்க மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

With the monsoon session of Parliament set to begin today, the DMK has issued an adjournment motion notice to discuss the Keezhadi excavations.

வைஷ்ணவி தேவி கோயில் செல்லும் பாதையில் நிலச்சரிவு: 10 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பழைய பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 5 பக்தர்கள் உள்பட 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.திரிகுடா மலைகளில் உள்ள ... மேலும் பார்க்க

மும்பையில் கனமழை: தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

மும்பையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இந்த மாத தொடக்கத்தில் மழை குறைந்து, கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் ... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஒடிஸா காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது!

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில், ஒடிஸா மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஒடிஸா காங்கிரஸ் இளைஞரணி தலைவர் உதித் பிரதான், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 19 வயது பொறியிய... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!

மக்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றுமுதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடர் நடை... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: நாட்டின் ராணுவ வலிமையை உலக நாடுகளே வியந்தன - பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம், நமது நாட்டின் ராணுவ வலிமையைக் கண்டு உலக நாடுகளே வியந்தன என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இன்று தொடங்கி, ஆக... மேலும் பார்க்க

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.முதல் நாள் கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச... மேலும் பார்க்க