செய்திகள் :

மும்பையில் கனமழை: தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

post image

மும்பையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இந்த மாத தொடக்கத்தில் மழை குறைந்து, கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் மும்பை நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

இருப்பினும், மழையின் தீவிரம் அதிகாலை முதல் குறைந்தது.

மும்பையின் மேற்குப் பகுதியில் உள்ள அந்தேரி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேசமயம் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து இயக்கம் மெதுவாக இருந்தாக வாகன ஓட்டிகள் தெரித்தனர்.

மேலும் உள்ளூர் ரயில்களும் சிறிது தாமதமாக இயக்கப்பட்டதாக பயணிகள் சிலர் புகார் கூறினர்.

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஒடிஸா காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது!

திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மும்பை நகரத்தில் சராசரியாக 23.45 மிமீ மழையும், கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் 36.42 மிமீ மழையும், மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 50.02 மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு, மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறிப்பிட்ட சில இடங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Heavy rains lashed Mumbai overnight, causing waterlogging in some low-lying areas and slowing vehicular movement in parts of the city, civic officials said on Monday.

குஜராத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை! அதிர்ச்சி தரும் காரணம்

குஜராத் மாநிலத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிதிநிலைமைதான் இதற்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்... மேலும் பார்க்க

பாம்பை வெறும் கைகளால் பிடித்த பாலிவுட் நடிகர் சோனு சூட் !

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்தார். பாலிவுட் நடிகர் சோனு சூட் சனிக்கிழமை தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் த... மேலும் பார்க்க

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்தது!

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்தியாவின் ஏஐ2744 விமானம் இன்று காலை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வத... மேலும் பார்க்க

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு !

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை பெயர்த்து கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், கங்காநகரில் உள்ள கோடாபூர் கிராமத்தில் பி.ஆர். அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்... மேலும் பார்க்க

சசி தரூருக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம்: காங்கிரஸ் மூத்த தலைவர்

காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளீதரன் கூறியுள்ளார். கடந்த 2022 காங்கிரஸ் தலைவர் தேர்தல் முதலே கட்சியின் மீது சசி தரூர் அதிருப்தியில்... மேலும் பார்க்க

தில்லி உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!

தில்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புதிதாக மாற்றப்பட்ட... மேலும் பார்க்க