செய்திகள் :

வைஷ்ணவி தேவி கோயில் செல்லும் பாதையில் நிலச்சரிவு: 10 பேர் காயம்!

post image

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பழைய பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 5 பக்தர்கள் உள்பட 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திரிகுடா மலைகளில் உள்ள சன்னதிக்கு வருகைதரும் பக்தர்களுக்கான அடிப்படை முகாமான கத்ரா நகரத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் முன்பதிவு அலுவலகம் மற்றும் மேல்நிலை இரும்பு அமைப்பு இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்ல பிற்பகல் 1 மணி பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பங்கங்கா அருகே உள்ள குல்ஷன் கா லங்காரில் காலை 8.30 மணியளவில் நடந்தது. பக்தர்கள் நகரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள குகைக் கோயிலுக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு பெரும்பாலும் குதிரை சவாரி செய்பவர்கள் பழைய பாதையில் ஒன்றுகூடிப் பதிவு செய்கிறார்கள்.

நிலச்சரிவில் மூன்று பேர் படுகாயமடைந்தனர், மேலும் ஏழு பேர் லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று மாதா வைஷ்ணவி தேவி ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சச்சின் குமார் வைஷ்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜம்மு மாவட்ட நீதிபதி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முழு அளவிலான மீட்பு மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகக் கூறினார்.

உள்ளூர் தன்னார்வலர்கள், ஆலய வாரிய ஊழியர்கள், எஸ்டிஆர்எஃப், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் பணியாளர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையைச் சேர்ந்த உப்பன் (70), அவரது மனைவி கே. ராதா (66), ஹரியாணாவைச் சேர்ந்த ராஜிந்தர் பல்லா (70) ஆகியோர் நாராயண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அதே நேரத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த லீலா ராய்க்வர் (56) கட்ரா சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வானிலை ஆய்வுத் துறையின் கூற்றுப்படி, இன்று காலை 8.30 நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் கத்ரா நகரில் 184.2 மிமீ மழை பதிவாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஹிம்கோட்டி அருகே மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டதால் புதிய பாதை தடைப்பட்டுள்ளது, அதைச் சரிசெய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

A massive landslide struck the old track to the Vaishno Devi shrine in Reasi district of Jammu and Kashmir on Monday, leaving at least 10 persons including five pilgrims, injured, officials said.

இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர்: நாட்டின் ராணுவ வலிமையை உலக நாடுகளே வியந்தன - பிரதமர் மோடி

பாம்பை வெறும் கைகளால் பிடித்த பாலிவுட் நடிகர் சோனு சூட் !

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்தார். பாலிவுட் நடிகர் சோனு சூட் சனிக்கிழமை தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் த... மேலும் பார்க்க

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்தது!

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்தியாவின் ஏஐ2744 விமானம் இன்று காலை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வத... மேலும் பார்க்க

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு !

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை பெயர்த்து கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், கங்காநகரில் உள்ள கோடாபூர் கிராமத்தில் பி.ஆர். அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்... மேலும் பார்க்க

சசி தரூருக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம்: காங்கிரஸ் மூத்த தலைவர்

காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளீதரன் கூறியுள்ளார். கடந்த 2022 காங்கிரஸ் தலைவர் தேர்தல் முதலே கட்சியின் மீது சசி தரூர் அதிருப்தியில்... மேலும் பார்க்க

தில்லி உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!

தில்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புதிதாக மாற்றப்பட்ட... மேலும் பார்க்க

அவையில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதியில்லை; புது உத்தியைக் கையாளும் அரசு! ராகுல்

நாடாளுமன்ற அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பேச அனுமதிக்காமல், புது உத்தியை கையாளுகின்றனர் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ... மேலும் பார்க்க