செய்திகள் :

”குடமுழுக்கா இல்லை திமுக கட்சிக் கூட்டமா?" - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரைச் சாடும் பாஜக; பின்னணி என்ன?

post image

தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் அரண்மனை தேஸ்வதானம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோயில் குடமுழுக்கு விழாவானது மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஆலோசனைப்படி நடத்தப்பட்டது.

பா.ஜ.க கருப்பு.மருகானந்தம் நிர்வாகிகளுடன்

குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்வதற்கு அனுமதி அட்டை (பாஸ்) வழங்குவதில் மாவட்ட ஆட்சியர் முறையாக நடந்து கொள்ளவில்லை எனவும் பக்தர்களை முறையாக அனுமதிக்காமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்கப்பட்டனர் எனவும் பா.ஜ.க-வின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் கருப்பு முருகானந்தம் கூறியதாவது, "மாரியம்மன் கோயில் திருப்பணிகளுக்கு வசூலிக்கப்பட்ட நன்கொடை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

குடமுழுக்கில் கலந்து கொண்ட பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்ததாகச் சொல்கிறார்கள். பாஸ் வழங்குவதில் மாவட்ட ஆட்சியர் நடுநிலையுடன் நடந்து கொள்ளவில்லை. லட்சக்கணக்கில் நிதி கொடுத்தவர்களுக்கு முறையாக பாஸ் வழங்காமல் தி.மு.க நிர்வாகிகளுக்கு அதிகமாக வழங்கியிருக்கிறார். இது தொடர்பாகக் கேட்பதற்குப் பல முறை போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா

கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம் என்ற பிறகு எங்கள் கட்சிக்குப் பத்து பாஸ் வழங்கினர். ஆட்சியர் பாஸ் வழங்குவதில் திட்டமிடலுடன் செயல்பட்டிருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் பொதுவானவராக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கானவராக இருக்க வேண்டும். ஆளும் கட்சிக்காரரைப் போல் இருக்கக் கூடாது. இது என்ன கோயில் குடமுழுக்கா இல்லை தி.மு.க கட்சி கூட்டமா? மாவட்ட ஆட்சியரின் செயல் மேசமான முன்னுதாரணம். எனவே அவருக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

``சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால்... நகரம் முழுவதும் வெடிக்கும்" - ஹாமஸை எச்சரிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அவரின் அதிரடி நடவடிக்கைகள், சர்ச்சைக்குள்ளாகும் சட்டங்கள், விமர்சனத்துக்குள்ளாகும் கருத்துக்களின் மூலம் தினம் தினம் செய்திகளில் இடம்பெறுகிறார். கடந்த வாரம்... மேலும் பார்க்க

``ஊழல் லிஸ்ட்டில் சிறை செல்லும் முதல் நபர் கமிஷன் காந்தி தான்" - அண்ணாமலை

‘ஊழல் அமைச்சர் காந்தி உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது திமுக ஊழல் அமைச்சர்களில் காந்தியே ம... மேலும் பார்க்க

செங்கோட்டையனால் மிரளும் எடப்பாடி? ஒரு பழைய பகை உள்ளது? | Elangovan Explains

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஒட்டி, எடப்பாடிக்கு பாராட்டு விழா எடுத்தார்கள். அதை மாஜி அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். 'என் உணர்வுகளை பகிர்ந்து உள்ளேன்' என அ... மேலும் பார்க்க

`சீமான் நல்ல என்டர்டெய்னர்; நானும் அவரை ரசிக்கிறேன்'- பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன்

தமிழக பாஜக-வில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று தேனியில் மாவட்டத் தலைவர் ராஜபாண்டி பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங... மேலும் பார்க்க

Census: `NFSA பலன்கள் கிடைக்காமல் 14 கோடி பேர் தவிப்பு; மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது?' - சோனியா

ஒரு நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது அந்நாட்டின் வளர்ச்சிக்கு மிக அவசியமானதாக இருக்கிறது. காரணம், நாட்டில் எவ்வளவு மக்கள் இருக்கின்றனர், ஆண் பெண் விகிதம் எப்படியிருக்கிறது, எவ்வளவு பேர் கல்வியற... மேலும் பார்க்க

Rahul Gandhi: "ராகுல்ஜி ஜீரோ பாருங்கள்..." - நாடாளுமன்றத்தில் ராகுலைக் கிண்டல் செய்த அனுராக் தாகூர்

டெல்லியில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க 48 இடங்களில் வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இ... மேலும் பார்க்க