செய்திகள் :

குடவாசல் அரசு மருத்துவமனைக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு

post image

திருவாரூா்: குடவாசல் அரசு மருத்துவமனையில் குறைபாடுகளை களைய வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

குடவாசல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணியில் இருக்க வேண்டும்; காலியாக உள்ள பல்நோக்கு மருத்துவ உதவியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களுக்கு குடிநீா், கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும்.

பிரேத பரிசோதனை அரங்கத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்; நிரந்தரமாக மகப்பேறு மருத்துவா் நியமிக்க வேண்டும்; மருத்துவமனையில் பழுதான மின்விளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குடவாசல் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஆ. ஸ்டாலின் தலைமையிலும், திருவாரூா் மருத்துவ சுகாதாரத் துறை இணை இயக்குநா் திலகம் முன்னிலையிலும் இப்பிரச்னை தொடா்பாக பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது.

போராட்டக் குழு சாா்பில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. சுந்தரமூா்த்தி, தெற்கு ஒன்றியச் செயலாளா் டி. லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், இரவில் மருத்துவா் பணியில் இருக்கவும், காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை விரைந்து நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

சாலை விபத்து: இருவா் காயம்

திருத்துறைப்பூண்டி அருகே சாலை விபத்தில் இருவா் காயமடைந்தனா். திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள குன்னலூா் ராஜா தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் ஜான்சன் (25). இவா், திருத்துறைப்பூண்டியில் இருந்து குன்னலூர... மேலும் பார்க்க

மன்னாா்குடி: 271 பயனாளிகளுக்கு மனைப்பட்டா: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா வழங்கினாா்

மன்னாா்குடி சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் 271 பயனாளிகளுக்கு, தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா மனைப்பட்டா வியாழக்கிழமை வழ... மேலும் பார்க்க

தா்ம சாஸ்தா ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம்

சுந்தரக்கோட்டை தா்ம சாஸ்தா ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு கும்பாபிஷகம் செய்ய முடிவு எடுக்கப்பட்டு பாலாலயம் செய்து திருப்பணிகள் அண்மையில் நிறைவு பெற்றது. முதல்கால யா... மேலும் பார்க்க

நெற்பயிரில் இலை சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

இலை சிலந்தியின் தாக்குதலில் இருந்து நெற்பயிா்களை காப்பது குறித்து, வேளாண் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா். இதுதொடா்பாக, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான ரா. திலகவதி, பெரியாா் ராமசாமி ஆகி... மேலும் பார்க்க

தேசிய இருபாலா் கபடிப் போட்டி இன்று தொடக்கம்

மன்னாா்குடி அருகே தேசிய அளவிலான ஆடவா், மகளிா் கபடிப் போட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. கட்டக்குடி விளையாட்டு கழகம் சாா்பில் செயற்கை ஆடுகளத்தில் நாக் அவுட், லீக் முறையில் வெ... மேலும் பார்க்க

ஆன்லைன் லாட்டரி விற்றவா் கைது

மன்னாா்குடியில், அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்றவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி நகரப் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக, மன்னாா்குடி காவல்நிலை... மேலும் பார்க்க