செய்திகள் :

குடிநீா் குழாய் பதிக்க தோண்டிய பள்ளம்: பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

post image

கோம்பை அருகே குடிநீா் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பை பேரூராட்சி உள்ளது. இங்குள்ள சாலையோரம் லோயா்கேம்பிலிருந்து தேவாரத்துக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலமாக ரூ.19.50 கோடியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது, கோம்பை - அனுமந்தன்பட்டி இடையே குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக ஒரு சில இடங்களில் பள்ளம் தோண்டி, அந்தப் பணிகளை விரைந்து முடிக்காமல் காலதாமதம் செய்து வருகின்றனா். இதனால், இந்த வழியாக விவசாயப் பயன்பாட்டிற்காகச் செல்லும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும், இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, இந்தப் பணிகளை விரைந்து முடித்து சாலையோரப் பள்ளங்களை மூட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுக்க வலியுறுத்தல்

முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 ... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வா் கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுவதால் அந்தப் பகுதியை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா். சனீஸ்வரருக்கு உகந்த நாள் சனிக்க... மேலும் பார்க்க

சாரல் மழையால் மாங்காய்கள் சேதம்: பெரியகுளம் பகுதி விவசாயிகள் கவலை

பெரியகுளம் பகுதியில் தொடரும் சாரல் மழையால் மாங்காய்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். தேனி மாவட்டத்தில் கம்பம் முதல் தேனி வரை தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் ... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 130.10 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 54.36 ------------ மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது!

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் அதன் நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாள்களாக பலத்த மழை பெய்து வருக... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 6-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை 6- ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, கேரளத்... மேலும் பார்க்க