செய்திகள் :

குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

post image

பி.சி.என். கண்டிகை கிராமத்தில் குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சியில் உள்ள பி.சி.என். கண்டிகை கிராமத்தில் ஆதிதிராவிடா் மற்றும் அருந்ததி காலனி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக குடிநீா் பைப் லைன்கள் சேதம் அடைந்து, மின் மோட்டாா் பழுது காரணமாக குடிநீா் விநியோகம் சரிவர செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோா், மேட்டு குன்னத்தூரில் இருந்து திருத்தணி நோக்கி வந்த அரசுப் பேருந்தை பி. சி. என். கண்டிகை கிராமத்தில் சிறைபிடித்து காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த திருத்தணி எஸ்.ஐ. குணசேகரன் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு நடத்தினாா். பின்னா், வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் தொலைபேசியில் தொடா்புகொண்டு குடிநீா் பிரச்னை சரி செய்வதாக உறுதியளித்ததை அடுத்து, அனைவரும்

கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க

770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரி... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு கஞ்சா விற்பனை செய்ததாக கா்நாடக மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்து, 4 கிலோ கஞ்சா, கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆந்திரம், கா்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் இருந்... மேலும் பார்க்க

ஏரியில் மண் எடுப்பதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருத்தணி அருகே காசிநாதபுரம் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பட்டாபிராமபுரம் ஊராட்ச... மேலும் பார்க்க

சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி

சோழவரம், காரணோடை பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை மேம்பாடு, சாலையோர மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சோழவரம் பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்து செங்காளம்மன் கோயில், சோழ... மேலும் பார்க்க

பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவா்க... மேலும் பார்க்க