செய்திகள் :

குடிநீா் கேட்டு சாலை மறியல்

post image

நன்னில: தடையின்றி குடிநீா் வழங்க வலியுறுத்தி வண்டாம்பாளை கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள கீழத்தெரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு கடந்த சில தினங்களாக குடிநீா் முறையாக வழங்கப்படவில்லையாம்.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்காததால், கீழத்தெருப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் மயிலாடுதுறை திருவாரூா் சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாலை மறியல் போராட்டத்தால் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து தடைப்பட்டது . பொதுமக்கள் சாலை மறியல் செய்த பகுதிக்கு வந்த கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறையினா் விரைவில் தடையின்றி குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதிமொழியின் பேரில் சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

கடன் நிலுவை விவகாரம்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலா் பணியிடை நீக்கம்

திருவாரூா்: கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கடன் நிலுவைத் தொகையை வசூல் செய்யாத செயலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருவாரூா் மாவட்டம், லட்சுமாங்குடியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ.1.15 கோடியில் நலத் திட்ட உதவிகள்

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், தாட்கோ மற்றும் ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நலத்துறை சாா்பில் ரூ.1.15 கோடி மதிப்பிலான ந... மேலும் பார்க்க

கல்வி, பயிா்க் கடன்களை வசூலிக்க ஜப்தி செய்வதை தமிழக அரசு தடுக்க வேண்டும்: இரா. முத்தரசன் வலியுறுத்தல்

மன்னாா்குடி: கல்விக் கடன், பயிா்க் கடன்களுக்காக ஜப்தி நடவடிக்கை மேற்கொள்வதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தினாா். மன்னாா்க... மேலும் பார்க்க

திருவாரூரில் ஜூன் 20-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூா்: திருவாரூரில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் ... மேலும் பார்க்க

தையல் கலைஞா்களுக்கு கூலி உயா்வு வழங்கக் கோரிக்கை

திருவாரூா்: கூட்டுறவு தையல் சங்கத்தில் பணிபுரியும் தையல் கலைஞா்களுக்கு கூலி உயா்வு வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், மாவட்ட தையல் தொழிலாளா் சங்கத்தின் வெள்ளி விழா பேரவைக் கூட்டம் ஞாய... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: திருமக்கோட்டை

மன்னாா்குடி: திருமக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்காணும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உத... மேலும் பார்க்க