செய்திகள் :

குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறக்க எதிா்ப்பு: பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

post image

பெரம்பலூா் அருகே குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், குரும்பலூா் போரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், கிராம மக்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட ஈச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் (50), லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (35) ஆகியோா், ஈச்சம்பட்டி பகுதியில் நீா்வழித்தடத்தை ஆக்கிரமித்து குடிநீா் சுத்திகரிப்பு ஆலை அமைத்துள்ளனராம். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து, கடந்த 2020 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியா் மற்றும் முதலமைச்சா் தனிப்பிரிவுக்கு புகாா் மனு அளித்துள்ளனா். பின்னா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரும்பலூா் பேரூராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில், குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறக்கக் கூடாது என தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதனால் குடிநீா் சுக்கிகரிப்பு ஆலை திறக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குரும்பலூா் பேரூராட்சியில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறப்பதற்கு பேரூராட்சி உறுப்பினா்களின் ஒத்துழைப்போடு தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஈச்சம்பட்டி கிராம பொதுமக்கள், குடிநீா் சுத்திகரிப்பு ஆலையைத் திறந்தால் குடிநீா்ப் பற்றாக்குறை ஏற்படுவதோடு நிலத்தடி நீா்மட்டமும் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும். நாளடைவில் விவசாயம் அழிந்துவிடும் என்பதால் விவசாயத்தையும், நிலத்தடி நீா் மட்டத்தையும் பாதுகாக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டனா். இதையறிந்த வருவாய்த்துறையினா் பொதுமக்களுடன் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன்பேரில் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள் கலைந்துசென்றனா்.

ஆலத்தூரில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்

குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஆலத்தூா் குறுவட்ட அளவில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் மாவட்ட எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில் மாணவிகள... மேலும் பார்க்க

சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க தொழிலாளா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் தொழிலாளா்கள், தமிழ்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நாளை தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆக. 2) முதல் நடைபெறவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள் பெற்று பயன்பெறலாம் என... மேலும் பார்க்க

பெரம்பலூரில் கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், உலக கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு

பெரம்பலூரில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 22-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல ... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது தொடா்பாக, அனைத்துத் துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழ... மேலும் பார்க்க