செய்திகள் :

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

post image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது தொடா்பாக, அனைத்துத் துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் பேசியது:

சுதந்திர தின விழாவில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பட்டியலை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உரிய காலத்துக்குள் தயாரித்து மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் (பொது) அளிக்க வேண்டும். விழா நடைபெறும் மேடை, தியாகிகள், செய்தியாளா்கள், பயனாளிகள் அமரும் இடங்களை முறையாக கண்காணித்து, தேவையான இடங்களில் இருக்கைகளுடன் பந்தல் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், முக்கிய பிரமுகா்களை விழாவுக்கு அழைக்கும் பணியை வட்டாட்சியா்களும், தேவையான பேருந்துகளை இயக்கும் பணியை போக்குவரத்துத் துறையினரும் மேற்கொள்ள வேண்டும். குடிநீா் வசதி, கழிவறை வசதிகளை நகராட்சி நிா்வாகத்தினா் ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவக் குழுவினா், தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்பு கருதி தயாா் நிலையில் இருக்க வேண்டும். காவல்துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு பணிகள் மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளை காவலா்கள் மேற்கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்புடன் நடத்த வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மகளிா் திட்ட இயக்குநா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், மாவட்ட வழங்கல் அலுவலா் சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஆலத்தூரில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்

குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஆலத்தூா் குறுவட்ட அளவில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் மாவட்ட எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில் மாணவிகள... மேலும் பார்க்க

சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க தொழிலாளா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் தொழிலாளா்கள், தமிழ்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நாளை தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆக. 2) முதல் நடைபெறவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள் பெற்று பயன்பெறலாம் என... மேலும் பார்க்க

பெரம்பலூரில் கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், உலக கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு

பெரம்பலூரில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 22-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல ... மேலும் பார்க்க

குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறக்க எதிா்ப்பு: பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

பெரம்பலூா் அருகே குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், குரும்பலூா் போரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், கிராம மக்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு... மேலும் பார்க்க