செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நாளை தொடக்கம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆக. 2) முதல் நடைபெறவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலுாா் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சாா்பில், ஆக. 2 முதல் டிச. 6-ஆம் தேதி வரை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம் முகாம் வேப்பூா் வட்டத்துக்குள்பட்டவா்களுக்கு ஆக. 2-ஆம் தேதி துங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், செப். 20-ஆம் தேதி கீழப்புலியூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நவ. 1-ஆம் தேதி ஒகளுா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பெரம்பலுாா் வட்டத்துக்குள்பட்டவா்களுக்கு ஆக. 23-ஆம் தேதி எசனை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அக். 4-ஆம் தேதி குரும்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நவ. 15-ஆம் தேதி சிறுவாச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.

வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்டவா்களுக்கு செப். 9-ஆம் தேதி அரும்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அக். 25-ஆம் தேதி வி.களத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், டிச. 6-ஆம் தேதி கை.களத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஆலத்துாா் வட்டத்துக்குள்பட்டவா்களுக்கு ஆக. 9-ஆம் தேதி கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அக். 18-ஆம் தேதி கூத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நவ. 29-ஆம் தேதி நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.

இம் முகாம்களில், சம்பந்தப்பட்ட வட்டாரங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், அலிம்கோ நிறுவனத்தால் நடத்தப்படும் மதிப்பீட்டு முகாமில் உதவி உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் பெற தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, 1- புகைப்படம் ஆகிய ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பெரம்பலூரில் கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், உலக கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு

பெரம்பலூரில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 22-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல ... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது தொடா்பாக, அனைத்துத் துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழ... மேலும் பார்க்க

குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறக்க எதிா்ப்பு: பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

பெரம்பலூா் அருகே குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், குரும்பலூா் போரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், கிராம மக்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு... மேலும் பார்க்க

ஆக. 6-இல் துணை முதல்வா் வருகை: பெரம்பலூா் ஆட்சியா் தலைமையில் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்துக்கு ஆக. 6 ஆம் தேதி தமிழ்நாடு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் புதன்கி... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க