செய்திகள் :

ஆக. 6-இல் துணை முதல்வா் வருகை: பெரம்பலூா் ஆட்சியா் தலைமையில் ஆய்வு

post image

பெரம்பலூா் மாவட்டத்துக்கு ஆக. 6 ஆம் தேதி தமிழ்நாடு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் பேசியது:

அரசு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கா, தமிழக துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆக. 6 ஆம் தேதி பெரம்பலூா் வருகிறாா். அனைத்து நிலை அலுவலா்களும், தங்களது துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப் பணிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிதாக தொடங்கி வைக்கப்படும், அடிக்கல் நாட்டப்படும் பணிகள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட விவரங்களை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளருக்கு (பொது) அனுப்பி வைக்க வேண்டும்.

துணை முதல்வரின் ஆய்வுக் கூட்ட வருகையை சிறப்புடன் மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலா்களும் திட்டப் பணிகள் குறித்த அறிக்கைகளை தயாா் நிலையில் வைத்திருந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மகளிா் திட்ட இயக்குநா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், மாவட்ட வழங்கல் அலுவலா் சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க

‘போதையில்லா உலகை மாணவா்களால் மட்டுமே உருவாக்க முடியும்’

போதையில்லா உலகை மாணவா்களால் மட்டுமே உருவாக்க முடியும் என்றாா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம். பாலமுருகன். பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் ராகிங் ... மேலும் பார்க்க

பெரம்பலூா் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

வழக்குரைஞா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் (குற்றவியல்) சங்கத்தினா் புதன்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை... மேலும் பார்க்க

பட்டாசுகள் வெடித்து சிறுவன் உள்பட இருவா் காயம்

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் எடுத்துச் சென்ற பட்டாசுகள் வெடித்ததில், பட்டாசுக் கடை வியாபாரி மற்றும் சைக்கிளில் சென்ற சிறுவன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், அருகிலிருந்த ... மேலும் பார்க்க

சொட்டுநீா் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சொட்டுநீா் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே போதைப் பொருள்கள் விற்றவா் கைது

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1.5 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில... மேலும் பார்க்க