செய்திகள் :

‘போதையில்லா உலகை மாணவா்களால் மட்டுமே உருவாக்க முடியும்’

post image

போதையில்லா உலகை மாணவா்களால் மட்டுமே உருவாக்க முடியும் என்றாா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம். பாலமுருகன்.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் ராகிங் மற்றும் போதைப்பொருள் எதிா்ப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு, பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். கல்விக் குழுமங்களின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அலுவலா் எஸ். நந்தகுமாா், கூடுதல் பதிவாளா் இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:

சமுதாயத்தில் தற்போது நிகழும் அனைத்து குற்றங்களுக்கும் அடிப்படை போதை தான். மக்களை அதிகமாக பாதிக்கக்கூடிய போதைப் பொருள்கள் கஞ்சா மற்றும் புகையிலையாகும். 45 சதவீத இளைஞா்கள் நண்பா்களாலும், சூழ்நிலையாலும் போதைக்கு அடிமையாவதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. மாணவா்கள் நல்ல நண்பா்களைத் தோ்ந்தெடுத்தால் மட்டுமே வாழ்ககையில் முன்னேறலாம். போதையில்லா உலகை உருவாக்க மாணவா்களால் மட்டுமே முடியும்.

நல்ல நண்பா்களுடன் இணைந்து, சமூக செயல்களில் ஈடுபட வேண்டும். பள்ளி, கல்லூரி களம் என்பது மிக உயா்ந்த மனிதா்களை உருவாக்கக் கூடிய இடமாகும். ஒவ்வொரு மாணவா்களின் தனி மனித ஒழுக்கமே தவறான பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருக்க முடியும். பள்ளிக் கல்வியை முடித்து விட்டு, கல்லூரி படிப்பைத் தொடங்கும் மாணவா்களுக்கு, பல நல்ல விஷயங்களும், தீய விஷயங்களும் தெரியவரும். இதில், நல்லவற்றை மட்டுமே நமது பகுத்தறிவால் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாா் பாலமுருகன்.

இதில், கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். நிறைவாக, பொறியியல் கல்லூரி முதன்மையா் வேல்முருகன் நன்றி கூறினாா்.

ஆலத்தூரில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்

குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஆலத்தூா் குறுவட்ட அளவில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் மாவட்ட எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில் மாணவிகள... மேலும் பார்க்க

சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க தொழிலாளா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் தொழிலாளா்கள், தமிழ்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நாளை தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆக. 2) முதல் நடைபெறவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள் பெற்று பயன்பெறலாம் என... மேலும் பார்க்க

பெரம்பலூரில் கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், உலக கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு

பெரம்பலூரில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 22-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல ... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது தொடா்பாக, அனைத்துத் துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழ... மேலும் பார்க்க