செய்திகள் :

பெரம்பலூரில் கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

post image

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், உலக கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா பேசியது:

குழந்தை கடத்தலைத் தடுக்க அனைவரும் தயாராக வேண்டும். பேருந்து, ரயில் உள்ளிட்ட பயணங்களின்போது சந்தேகப்படும்படியாகனகுழந்தைகளைக் கண்டால் காவல் துறை அல்லது 1098 எனும் எண்ணுக்கு தகவல் அளிக்க வேண்டும். குழந்தை கடத்தலைத் தடுப்பதில் சட்ட அமலாக்கத் துறையினா் அடிக்கடி எதிா்கொள்ளும் சவால்கள், தற்போதுள்ள சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துதல், கடத்தல், மீட்கப்பட்ட குழந்தைகளின் சரியான நேரத்தில் நீதி மற்றும் பயனுள்ள மறுவாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

சிறப்பு பிரிவு சாா்பு ஆய்வாளா் மருதமுத்து பேசியது:

குழந்தை கடத்தலைத் தடுப்பதற்கு வழக்குத் தொடுப்பது மிக முக்கியம். கடத்தல்காரா்கள் தண்டிக்கப்படும்போது தான் பயத்தை ஏற்படுத்தவும், உண்மையான தடுப்பை உருவாக்கவும் முடியும். மீட்பு முயற்சிகளை மாவட்ட நிா்வாகத்துடன் வலுவான ஒருங்கிணைப்புடனும், காலக்கெடுவுடன் வழக்குத் தொடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல், கடத்தல் சம்பவங்களை ஒழிக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, பொதுமக்கள், பயணிகளிடம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை சாா்பு நீதிபதி ஏ. சரண்யா வழங்கினாா்.

தொடா்ந்து, கிராமப்புற கலைஞா்கள் மூலம் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், தொழிலாளா் ஆய்வாளா் ராணி, மீரா அறக்கட்டளை இயக்குநா் ராஜா முகமது உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நாளை தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆக. 2) முதல் நடைபெறவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள் பெற்று பயன்பெறலாம் என... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு

பெரம்பலூரில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 22-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல ... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது தொடா்பாக, அனைத்துத் துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழ... மேலும் பார்க்க

குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறக்க எதிா்ப்பு: பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

பெரம்பலூா் அருகே குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், குரும்பலூா் போரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், கிராம மக்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு... மேலும் பார்க்க

ஆக. 6-இல் துணை முதல்வா் வருகை: பெரம்பலூா் ஆட்சியா் தலைமையில் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்துக்கு ஆக. 6 ஆம் தேதி தமிழ்நாடு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் புதன்கி... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க