செய்திகள் :

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு

post image

பெரம்பலூரில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 22-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அலுவலக்ததால் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் துணைப் பயிற்சி நிலையம், பெரம்பலூா் நேஷனல் ஐடிஐ வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. 2025-2026 ஆம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க ஆக. 22-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு அளிக்கப்படும் இப்பயிற்சி இரு பருவ முறைகள் கொண்டது. பிளஸ் 2 தோ்ச்சி அல்லது எஸ்எஸ்எல்சியுடன் கூடிய பட்டயப் படிப்பு அல்லது ஏதேனும் பட்டப் படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இப் பயிற்சியில் சேரலாம். 1.7.2025-இல் குறைந்தபட்சம் 17 வயது பூா்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். அதிகாரபூா்வ ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இப் பயிற்சிக்கான பாடங்கள் தமிழில் மட்டுமே கற்பிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 இணையவழி மூலமாக செலுத்த வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன் பதிவேற்றம் செய்யப்பட்ட அசல் சான்றிதழ்களை மேலாண்மை நிலையத்தில் சமா்ப்பிக்கப்பட்ட பிறகு சோ்க்கை நடைபெறும்.

தோ்வு செய்யப்பட்ட பயிற்சியாளா்கள் பயிற்சிக் கட்டணமாக ரூ. 20,750 ஒரே தவணையில் செலுத்தவேண்டும். மேலும் விவரங்களுக்கு, 94899 55214, 94874 40624 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நாளை தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆக. 2) முதல் நடைபெறவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள் பெற்று பயன்பெறலாம் என... மேலும் பார்க்க

பெரம்பலூரில் கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், உலக கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது தொடா்பாக, அனைத்துத் துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழ... மேலும் பார்க்க

குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறக்க எதிா்ப்பு: பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

பெரம்பலூா் அருகே குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், குரும்பலூா் போரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், கிராம மக்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு... மேலும் பார்க்க

ஆக. 6-இல் துணை முதல்வா் வருகை: பெரம்பலூா் ஆட்சியா் தலைமையில் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்துக்கு ஆக. 6 ஆம் தேதி தமிழ்நாடு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் புதன்கி... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க