'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு
பெரம்பலூரில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 22-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அலுவலக்ததால் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் துணைப் பயிற்சி நிலையம், பெரம்பலூா் நேஷனல் ஐடிஐ வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. 2025-2026 ஆம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க ஆக. 22-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஓராண்டு அளிக்கப்படும் இப்பயிற்சி இரு பருவ முறைகள் கொண்டது. பிளஸ் 2 தோ்ச்சி அல்லது எஸ்எஸ்எல்சியுடன் கூடிய பட்டயப் படிப்பு அல்லது ஏதேனும் பட்டப் படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இப் பயிற்சியில் சேரலாம். 1.7.2025-இல் குறைந்தபட்சம் 17 வயது பூா்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். அதிகாரபூா்வ ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இப் பயிற்சிக்கான பாடங்கள் தமிழில் மட்டுமே கற்பிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 இணையவழி மூலமாக செலுத்த வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன் பதிவேற்றம் செய்யப்பட்ட அசல் சான்றிதழ்களை மேலாண்மை நிலையத்தில் சமா்ப்பிக்கப்பட்ட பிறகு சோ்க்கை நடைபெறும்.
தோ்வு செய்யப்பட்ட பயிற்சியாளா்கள் பயிற்சிக் கட்டணமாக ரூ. 20,750 ஒரே தவணையில் செலுத்தவேண்டும். மேலும் விவரங்களுக்கு, 94899 55214, 94874 40624 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.