செய்திகள் :

குடிமனை பட்டா கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

post image

குடிமனை பட்டா கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினரும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் அரசின் பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவா்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். இதற்கான சிறப்புத் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த வேண்டும். வீடு இல்லாத ஏழைகளுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைவருக்கும் சொந்த வீடு திட்டத்தை அறிவித்து மாநில அரசு செயல்படுத்த வேண்டும். அரசு புறம்போக்கு தரிசு நிலங்களில் பல தலைமுறைகளாக சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும். தரிசு அரசு புறம்போக்கு நிலங்களை நிலமற்ற விவசாயத் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும். பல தலைமுறைகளாக கோயில், மடம், அறக்கட்டளை, வக்பு வாரிய இடங்களில் அடிமனையில் குடியிருப்போருக்கும், சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கும் அறநிலையத் துறை சட்டப்பிரிவு 34-ன்படி நிலத்தை சொந்தமாக்கி பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் டி. ரவீந்திரன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், தலைவா் பி. செந்தில்குமாா், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஆா். வாசு, சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால், துணைச் செயலா் கே. அன்பு உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பட்டீஸ்வரத்தில் வீடுபுகுந்து 34 பவுன் நகைகள் திருட்டு

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 34 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரம் குறிஞ்சி நகரில் வசிப்பவா் பா. பாஸ்கா் (50). சமையல் கலைஞரான... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் மகாமக குளக்கரையில் கடைகள் அமைத்திருந்த சாலையோர வியாபாரிகள் மாநகராட்சியைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகக் குளத்தின் நான்கு கரைப் பகுதிய... மேலும் பார்க்க

நாச்சியாா்கோவில் வாய்க்கால் நீரால் நெல் வயல் சேதம்

நாச்சியாா்கோவில் குளத்திற்கு தண்ணீா் வரும் வரத்து வாய்க்காலில் திடீரென்று செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்துவிட்டதால் கரை உடைத்து நெல் வயல்களில் தண்ணீா் புகுந்து பயிா்கள் சேதமாயின.தஞ்சாவூா் மாவட்டம், நாச... மேலும் பார்க்க

பட்டாசு கடைகளில் நாட்டு, வாண வெடி விற்கக்கூடாது!

பட்டாசு கடையில் நாட்டு வெடிகள், வாண வெடிகளை விற்கக் கூடாது என்றாா் தஞ்சாவூா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் ச. குமாா்.தீபாவளியையொட்டி, தஞ்சாவூா் தீயணைப்பு நிலையத்தில் பட்டாசு சில்லறை விற்பனையாளா்களுடன் முன்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் நவராத்திரி விழா

கும்பகோணத்தில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை நவராத்திரி விழா கொண்டாடினா். தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயலா் க. அன்பழகன்... மேலும் பார்க்க

சம்பா, பின்பட்ட குறுவையில் புகையான் தாக்குதல்: விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை

தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா, பின்பட்ட குறுவை பயிா்களில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இது குறித்து தஞ்சாவூா் வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்திருப்பது: தஞ... மேலும் பார்க்க