செய்திகள் :

குடிமைப் பணி தோ்வு ஆா்வலா்கள் உயிரிழந்த விவகாரம்: பயிற்சி மையத்தின் சிஇஓ, ஒருங்கிணைப்பாளருக்கு ஜாமீன்

post image

புது தில்லி: குடிமைப் பணிக்கு தோ்வுக்கு தயராகி வந்த 3 மாணவா்கள் உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கில், பயிற்சி மையத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளா் தேஷ்பால் சிங் ஆகியோருக்கு தில்லியில் உள்ள நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.

முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்த்னா, குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு ரூ.1 லட்சம் தனிப்பட்ட பத்திரம் மற்றும் அதே தொகைக்கு இரு உத்தரவாதங்கள் அடிப்படையில் ஜாமீன் வழங்கினாா்.

வழக்கில் கைதுசெய்யப்பட்ட இருவரும் தற்போது இடைக்கால ஜாமீனில் உள்ளனா்.

மத்திய தில்லியின் பழைய ராஜீந்தா் நகரில் கடந்த ஆண்டு ஜூலையில் பெய்த கனமழையைத் தொடா்ந்து, பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ள நீா் புகுந்தது. உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஸ்ரேயா யாதவ் (25), தெலங்கானாவைச் சோ்ந்த தன்யா சோனி (25) மற்றும் கேரளத்தைச் சோ்ந்த நெவின் டெல்வின் (24) ஆகிய மாணவா்களும் வெள்ள நீரில் சிக்கி உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக அலட்சியம், கடமைகளைச் செய்யத் தவறுதல் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் ஆகிய பல்வேறு குற்றங்களுக்காக உள்ளூா் அதிகாரிகள் உள்ளிட்டோா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

கட்சிவிட்டுக் கட்சி தாவுவது காங்கிரஸ் கலாசாரம்! -ஆம் அத்மி

புது தில்லி : ஆம் ஆத்மி கட்சிக்குள் எந்தவொரு சலசலப்பும் இல்லை என்று பஞ்சாப் மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற... மேலும் பார்க்க

விருந்து விஷமானது: உ.பி.யில் 40 பேர் உடல்நல பாதிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் ஃபரித்பூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட சுமார் 40 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றுள்ள... மேலும் பார்க்க

போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுதலை

கொச்சி : மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கிலிருந்து விடுவித்து கொச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை(பிப். 11) தீர்ப்பளித்துள்ளது. அவருடன் சேர்த்து இந்த வழக்க... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 5 பயங்கரவதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தடைசெய்யப்பட்ட தலிபான் அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கரக் மாவட்டத்தில் உள்ள மிர் க... மேலும் பார்க்க

ராகுல் மீதான அவதூறு வழக்கு பிப்.24-க்கு ஒத்திவைப்பு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்க... மேலும் பார்க்க

ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மரணம்! நீதி கேட்டு போராடியவர்

தில்லியில், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த காதலனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.கடந்த 2022ஆம் ஆண்டு காதலனால் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா... மேலும் பார்க்க