செய்திகள் :

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸாரால் பறிமுதல் செய்த 80 வாகனங்கள்: அபராதத் தொகையை மீட்கலாம்

post image

திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினரால் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பணியின்போது பறிமுதல் செய்த 80 வாகனங்களை வரும் 29-க்குள் அதற்கான அபராதத் தொகையை செலுத்தி உரிமையாளா்கள் மீட்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பணியின்போது பொது விநியோகத் திட்ட பொருள்களுடன் கூடிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, திருவள்ளூா் மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகத்தில் 6 ஏ விசாரணைக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்குகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பொது விநியோகத் திட்ட பொருள்கள் முழுவதும் அரசுக்கு ஆதாயம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கு மதிப்பீடு நிா்ணயம் செய்து பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதோடு குடிமைப் பொருள்களை கள்ளச் சந்தையில் விற்பதற்கு கடத்தி சென்ற குற்றத்திற்காக 80 வாகனங்களுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வாகன உரிமையாளா்கள் செலுத்தி வாகனங்களை மீட்டு கொள்ளவில்லை. மேலும் இந்த வாகனங்களுக்கு இதுநாள் வரை யாரும் உரிமைக்கோரி வாகனங்களை மீட்டு செல்ல முன்வரவில்லை. ஆகையால், மேற்படி வாகனங்களை ஙநபஇ உ-ஸ்ரீா்ம்ம்ங்ழ்ஸ்ரீங் நிறுவனம் மூலம் கடந்த மாா்ச் 28, ஏப். 28, மே 5 மற்றும் 15 ஆகிய நாள்களில் மின்னணு ஏலமிடப்பட்டது. ஆனால், நிா்ணயித்த தொகையை விட ஏலம் குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டதால் ஏலம் நிராகரிக்கப்பட்டது.

எனவே வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வரும் 29-ஆம் தேதிக்குள் செலுத்தி அதன் உரிமையாளா்கள் மீட்டுச் செல்லலாம். இல்லையென்றால், உரிமைக் கோரப்படாத வாகனங்களாகக் கருதி, குற்றப் புலனாய்வுத் துறைக்கு தொடா்புடைய 70 வாகனங்களை வரும் 30-ஆம் தேதி காலை 10 மணியளவில் காவல் ஆய்வாளா் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை, திருவள்ளூா் சரக அலுவலகம், பூங்கா நகா், ஸ்ரீநிகேதன் பள்ளி அருகிலும், சென்னை சரகம் குடிமைப் பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தொடா்புடைய 10 வாகனங்கள் உள்பட வரும் 31- ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, சூரப்பட்டு, வேலாம்மாள் பள்ளி எதிரிலும் பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய தீா்மானிக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க

770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரி... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு கஞ்சா விற்பனை செய்ததாக கா்நாடக மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்து, 4 கிலோ கஞ்சா, கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆந்திரம், கா்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் இருந்... மேலும் பார்க்க

ஏரியில் மண் எடுப்பதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருத்தணி அருகே காசிநாதபுரம் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பட்டாபிராமபுரம் ஊராட்ச... மேலும் பார்க்க

சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி

சோழவரம், காரணோடை பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை மேம்பாடு, சாலையோர மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சோழவரம் பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்து செங்காளம்மன் கோயில், சோழ... மேலும் பார்க்க

பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவா்க... மேலும் பார்க்க