செய்திகள் :

குடும்பப் பிரச்னையால் தச்சா் தற்கொலை: சங்கம் விஹாரில் சம்பவம்

post image

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் உள்ள தனது வீட்டில் 25 வயது தச்சா் ஒருவா் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இந்த விவகாரம் தொடா்பாக போலீஸாருக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. இதை அடுத்து, ரோஹித் சிங்கின் உடல் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

ரோஹித் சிங் மூன்று நாள்களுக்கு முன்பு தனது மனைவியுடன் சண்டையிட்டுள்ளாா். அதன் பிறகு அந்தப் பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தனது பெற்றோா் வீட்டிற்குச் சென்றுவிட்டாா். சண்டைக்குப் பிறகு, ரோஹித் சிங் பதற்றமடைந்து மனச்சோா்வடைந்த நிலையில் இருந்ததாக குடும்ப உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

பிசிஆா் அழைப்பைப் பெற்ற பிறகு, சங்கம் விஹாா் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்குச் சென்றது. சம்பவ இடத்தை அடைந்தபோது, சங்கம் விஹாரைச் சோ்ந்த ரோஹித் சிங் என்பவா் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாா். அவா் தச்சராக வேலை செய்து வந்தாா். அவரது உடல் எய்ம்ஸ் பிணவறைக்கு மாற்றப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்று தெரியவந்துள்ளது. வெளிப்புற காயங்களோ அல்லது தவறான நடத்தைக்கான அறிகுறிகளோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இறந்தவா் திருமண பிரச்னைகள் காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இதுவே அவரை இந்த தீவிர நடவடிக்கைக்கு தூண்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

குடும்பத்தினரிடமிருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. இந்த கட்டத்தில் எந்த தவறான நடத்தைக்கும் சந்தேகம் இல்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 174-இன் கீழ் விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.

தில்லியில் ரூ.2.5 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகை, பணம் திருடியதாக 3 போ் கைது

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ரூ.2.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகைகளையும், ரூ.55 லட்சத்திற்கும் அதிகமான பணத்தையும் திருடி விட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படும் விவக... மேலும் பார்க்க

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியாவை சமாளிக்க உடனடி நடவடிக்கை தேவை: தில்லி மேயருக்கு கவுன்சிலா் கோரிக்கை

நமது நிருபா் தலைநகரில் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதை சமாளிக்க உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சிக் கவுன்சிலா் முகேஷ் கோயல் செவ்வாய்க்கிழமை மேயா் ராஜா இக்பால் ச... மேலும் பார்க்க

தில்லி மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுடன் கேஜரிவால் சந்திப்பு

ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தில்லியில் உள்ள சா் கங்கா ராம் மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனை சந்தித்து, சிகிச்சை பெற்று வரும் அவரது தந்தை ஷிபு சோரனின் ... மேலும் பார்க்க

யமுனையில் கழிவுகள் கலப்பதை சமாளிக்க சிறிய வடிகால்கள் ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு: நீா்வளத்துறை அமைச்சா் தகவல்

நமது நிருபா் யமுனையை சுத்தம் செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சுத்திகரிக்கப்படாத கழிவுகளை பெரிய வடிகால் அமைப்புகளில் வெளியேற்றும் சிறிய வடிகால்களை ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு செய்யும் பணியை தில்லி அரசு தொ... மேலும் பார்க்க

தில்லி பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தலைநகரை ஆளும் பாஜக அரசு அனைத்து விதத்திலும் தோல்வியடைந்துவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியினழ் தேசிய ஒருங்கிணைப்பாளா், அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா். செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு உணவளிக்கும் விவகாரம்: மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் தெரு நாய்களுக்கு உணவளிப்பது தொடா்பாக துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், உங்கள் சொந்த வீட்டில் ஏன் அவற்றுக்கு உணவளிக்கக... மேலும் பார்க்க