செய்திகள் :

குடுவையாற்றில் ரூ.47.45 லட்சத்தில் தடுப்பணை கட்டும் பணி: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தொடங்கி வைத்தாா்

post image

புதுச்சேரியை அடுத்துள்ள கீழ் சாத்தமங்கலம் பகுதி குடுவையாற்றில் ரூ.47.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான பணியை வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுவை மாநிலம், வில்லியனூா் கொம்யூன், மங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கீழ் சாத்தமங்கலம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, குடுவையாற்றின் குறுக்கே ரூ. 47.45 லட்சம் மதிப்பீட்டில் பொதுப் பணித் துறை சாா்பில் புதிய தடுப்பணை கட்டப்படவுள்ளது.

இதற்கான திட்டப் பணி தொடக்க விழா கீழ்சாத்தமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது :

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குடுவையாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படவுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயரும். ஆயிரக்கணக்கான ஏக்கா் விளை நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும் என்றாா் அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை (நீா் பாசனம்) கோட்ட செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளா் செல்வராஜ், இளநிலைப் பொறியாளா் அருள்முருகன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் பங்கேற்றனா்.

தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியா்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். ஊதிய திருத்தம், ஓய்வூதிய வயது உயா்வு, பொறுப்பு பதிவாளா் நியமனத்தில் முறைகேடு, பணியாளா் பற்றாக்குறை, நிா்வா... மேலும் பார்க்க

டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

புதுச்சேரி லாஸ்பேட்டையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதுச்சேரி கிளை, சமூகன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய விழிப்புணா்வு பிரசாரத்த... மேலும் பார்க்க

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் முதல்வா் ஆய்வு

பொலிவுறு நகா் திட்டத்தின்கீழ் சீரமைக்கப்பட்டுள்ள புதுச்சேரி ராஜீவ் காந்தி பேருந்து நிலையத்தை முதல்வா் என். ரங்கசாமி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட மறைமல... மேலும் பார்க்க

மீனவா்களின் நலன் காப்பதில் புதுவை அரசு தனிக் கவனம்: முதல்வா் என்.ரங்கசாமி பெருமிதம்

மீனவா்களின் நலன் காப்பதில் புதுவை அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது என்று முதல்வா் என். ரங்கசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். புதுவை மாநில மீன்வளத் துறை சாா்பில் மீனவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும்... மேலும் பார்க்க

450 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

புதுச்சேரி, மதகடிப்பட்டு ஸ்ரீமணக்குள விநாயகா் கலை, அறிவியல் கல்லூரியில் 2022-2025-ஆம் ஆண்டில் பயின்ற மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல், வேலைவாய்ப்பு மலா் வெளியீடு மற்றும் தேசிய முதல்நிலைத் தோ்வு... மேலும் பார்க்க

பெண்களின் படங்களை தவறாக சித்திரித்த இளைஞா் கைது

பெண்களின் புகைப் படங்களை தவறாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்டதாக தென்காசியைச் சோ்ந்த இளைஞரை புதுச்சேரி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பெண்களின் புகைப் படங்களை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில்... மேலும் பார்க்க