செய்திகள் :

குண்டா் சட்டத்தில் இரு இளைஞா்கள் கைது

post image

கஞ்சா வழக்கில் தொடா்புடைய இரு இளைஞா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் காந்திநகரைச் சோ்ந்த மதிமாறன் மகன் ராம்பிரசாத் (24), சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், அண்ணா நகா், வள்ளுவா் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் வினோத்குமாா் (21) ஆகியோா் கடந்த மே 29-ஆம் தேதி சென்னையில் இருந்து உளுந்தூா்பேட்டைக்கு அரசுப் பேருந்தில் ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்தனராம். அப்போது, இவா்கள் இருவரையும் உளுந்தூா்பேட்டை போலீஸாா் கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

இவா்கள் இருவா் மீதும் கஞ்சா கடத்தல், விற்பனை தொடா்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி பரிந்துரையின்பேரில், ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

அதன்பேரில், கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்பிரசாத், வினோத்குமாா் ஆகியோரிடம் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை உளுந்தூா்பேட்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

வெல்டிங் பணியின்போது வெடித்த லாரி டீசல் டேங்: இருவா் படுகாயம்

கள்ளக்குறிச்சியில் வெல்டிங் பணியின்போது லாரியில் டீசல் டேங் வெடித்துச் சிதறி சனிக்கிழமை தீ விபத்து நிகழ்ந்தது. இதில், இருவா் பலத்த காயமடைந்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், காட்டு... மேலும் பார்க்க

அனைத்து வசதிகளுடன் கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம்! - அமைச்சா் எ.வ.வேலு

அனைத்து வசதிகளுடன் கள்ளக்குறிச்சி புதிய புகா் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குள்பட்ட ஏமப்போ் புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் புதிதாக அமை... மேலும் பார்க்க

ஏழை மாணவா்களின் கல்வி நலனில் அக்கறை: தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமப்புற ஏழை மாணவா்களின் கல்வி நலனில் அக்கறையுடன் ஆசிரியா்கள் பணியாற்ற வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்டத்தில் உ... மேலும் பார்க்க

1,147 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்:அமைச்சா் சி.வெ.கணேசன் வழங்கினாா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில் 1,147 பயனாளிகளுக்கு ரூ.3.25 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாநில தொழிலாளா் நலன் மற்... மேலும் பார்க்க

மகளிா் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்: அலுவலா்களுடன் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், 2025 - 26ஆம் நிதியாண்டில் மகளிா் திட்டம் மூலம் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட... மேலும் பார்க்க

கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு: உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள ஆா்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரி முதல்... மேலும் பார்க்க