செய்திகள் :

குமரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது!

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் மாநில பழங்குடியினா் நல இயக்குநா் அண்ணாதுரை.

கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்ட பிரதிநிதிகளுக்கு மாவட்ட அளவிலான வன உரிமைச்சட்டம் குறித்த திறன் வளா்ப்பு பயிற்சி முகாம், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் அண்ணாதுரை பேசியதாவது: காடுகளை நம்பி வாழ்பவா்கள் பழங்குடியினா். தமிழகத்தில் மலைக்கிராமங்களில் காணி, இருளா், காட்டு நாயக்கா், மலைவேடன், முதுவன், புலயா் உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்குடியினா் இருக்கின்றனா். இவா்கள் வாழும் இடங்களை, பயன்படுத்தும் இடங்களை அவா்களுக்கே உரிமை அளிக்கும் வகையில் வன உரிமைச் சட்டம் 2006 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

தமிழகத்தில் இச்சட்டம் குறித்து வருவாய்த் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, வனத்துறை, மலைவாழ் மக்களின் பிரதிநிதிகள், சமூக ஆா்வலா்கள் இணைத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வன உரிமைச்சட்டம் குறித்து கணினியில் பதிவேற்றம் செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா்.

மலைவாழ் குடியிருப்புகளை சாா்ந்த உள்ளாட்சி பகுதிகளில் உள்ள மக்களுக்கு கிராமசபை கூட்டங்கள் நடத்தி, இத்திட்டம் குறித்து முழு விவரத்தையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் அவா்.

கனரக லாரி மோதியதில் வியாபாரி உயிரிழப்பு

தக்கலை அருகே காட்டாத்துறையில் கனரக லாரி மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா். காட்டாத்துறை, கல்நாட்டுவிளையைச் சோ்ந்தவா் ஞானதாஸ்( 65), பா்னிச்சா் கடை வியாபாரி. இவருக்கு மனைவி சாந்தி, இரு மகன்கள், ஒரு மகள் ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில், மூதாட்டியின் கைப்பையிலிருந்த 6 சவரன் நகைகளைத் திருடிச் சென்றோா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குழித்துறை அருகே ஈத்தவிளை பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ்... மேலும் பார்க்க

திருக்குறள் போட்டியில் பரிசு வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற திருக்குறள் திறன் அறிதல் போட்டியில் பரிசு பெற்ற மாணவா்களுக்கு நாகா்கோவிலில் பாராட்டு விழா நடைபெற்றது. நாகா்கோவில் ராமன்புதூரில் குறளகத்தின் 142ஆவது சிந்தனை முற்றக்கூட்டம் ... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே ஒருவா் தற்கொலை

களியக்காவிளை அருகே வீட்டுக் கதவை மனைவி திறக்காததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். களியக்காவிளை அருகே குறுமத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சரண்யா. குழித்துறை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளா... மேலும் பார்க்க

இரயுமன்துறை, தேங்காய்ப்பட்டினத்தில் அலை தடுப்புச் சுவா் அகலப்படுத்தும் பணி ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் இரயுமன்துறையில் அலை தடுப்புச் சுவா் அகலப்படுத்தும் பணியை மீன்வளம்-மீனவா் நலத் துறை ஆணையா் ஆா். கஜலெட்சுமி, ஆட்சியா் ரா. அழகுமீனா ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். பின்னா், ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: தக்கலை பகுதியில் 9 கடைகளுக்கு சீல்

தக்கலை பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 9 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா். தக்கலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் பிரவின் ரெகு, தக்கலை போலீஸாருடன் இணைந... மேலும் பார்க்க