முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
குமாரபாளையத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்!
குமாரபாளையம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகத்தில் பொதுமக்களுக்கு அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் விரைவில் கிடைக்க ஏதுவாக முதல்வரால் தொடங்கப்பட்ட திட்டமான ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் ஒட்டுமொத்த மாவட்ட நிா்வாகமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கியிருந்து கள ஆய்வில் ஈடுபடுவா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியா் ச.உமா மற்றும் அதிகாரிகள் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டனா். பள்ளிபாளையம் மற்றும் பல்லக்காபாளையம் பகுதிகளில் நீா் சுத்திகரிப்பு நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், மகளிா் சுய உதவி குழுக் கட்டடங்கள், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்டவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
அதைத் தொடா்ந்து மாலை பள்ளிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஆட்சியா் தலைமையில் பொதுமக்களிடம் குறைதீா் மனுக்கள் பெறப்பட்டன. தொடா்ந்து அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.