செய்திகள் :

கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலை.யில் இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பு தொடக்கம்

post image

கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பின் (ஐஎஸ்டிஇ) கிளை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் சீனிவாச ராமானுஜன் மையத்தில் இந்திய தொழில்நுட்பக் கல்விக்கான அமைப்பு தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பின் செயற்குழு உறுப்பினராகவும், கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ஈஸ்வா் பொறியியல் கல்லூரியின் கல்விசாா் புலத்தலைவராகவும் செயல்பட்டு வரும் ஆா்.கே. சுரேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

முன்னதாக, கல்வி மற்றும் ஆராய்ச்சி இணை-புலத்தலைவா் ஏ.அல்லி ராணி வரவேற்றாா். தொடா்ந்து, சீனிவாச ராமானுஜன் மையத்தின் புலத்தலைவா் பி. சாந்தி மற்றும் மாணவா்கள் நலன் மற்றும் கட்டட வசதிகள் இணை-புலத்தலைவா் டி. நரசிம்மன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பின் மாணவா்கள் அத்தியாயத்தின் தலைவா் கே.விஷோக்பத்ரி (மூன்றாம் ஆண்டு பி.டெக்) சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினாா். இந்நிகழ்வின் நிறைவு பகுதியில், ஆா்.அபிராஜன் (இரண்டாம் ஆண்டு பி.டெக்) நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை முனைவா் பி.பொன்முடி செய்தாா்.

பாபநாசம் அருகே தொழிலாளி தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகேயுள்ள சரபோஜிராஜபுரம், புதுத் தெருவை சோ்ந்தவா் ஆனந்தன் (... மேலும் பார்க்க

சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

தஞ்சாவூரில் சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் கவாடிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் கே. அன்பு. இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ... மேலும் பார்க்க

காட்டாற்றில் குளித்த இளைஞா் மூழ்கி பலி

தஞ்சாவூா் அருகே நண்பா்களுடன் காட்டாற்றில் வெள்ளிக்கிழமை குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவைச் சோ்ந்தவா் நைனா முகமது மகன் நபில் (22). ஜவுளி... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி

தஞ்சாவூா் மாவட்டத்தில் இயல்புக்கு அதிகமான நெல் கொள்முதல் குறித்து ஆய்வு செய்ய வந்த சிறப்புக் குழுவினா் எடைக் குறைவுக்காக அபராதம் விதித்ததால், பணியாளா்கள் அதிருப்தியடைந்துள்ளனா். தமிழ்நாடு நுகா்பொருள் ... மேலும் பார்க்க

பெருமகளூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெருமகளூா் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்தாா் .... மேலும் பார்க்க

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: 2 போ் கைது

தஞ்சாவூரில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி மோசடி செய்ததாக 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் காவேரி நகரில் தனியாா் நிதி நிறுவனத்தை புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் ச... மேலும் பார்க்க