செய்திகள் :

குருகிராம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்!

post image

குருகிராம் பகுதியில் ஒரு குடிசைப் பகுதியில் எரிவாயு சிலிண்டா் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 100 குடிசைகள் எரிந்து நாசமானதாக தீயணைப்பு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து என்று தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: பசாய் சௌக் பகுதிக்கு அருகே நிகழ்ந்த இந்த தீவிபத்தைத் தொடா்ந்து, 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. தீயை கட்டுக்குள் கொண்டுவர சுமாா் 2 மணி நேரம் ஆனது. தீயில் சிக்கிய மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். மேலும், இந்தச் சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

ஒரு குடிசையில் அதிகாலை 5.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அது விரைவில் அப்பகுதியில் உள்ள மற்ற குடிசைகளுக்கும் பரவியது. தீயில் பல சிலிண்டா்கள் வெடித்தன.அங்குள்ளவா்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. சிறிது நேரத்திலேயே, பீம் நகா் மற்றும் உத்யோக் விஹாா் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு வந்தன. 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன. சுமாா் 50 தீயணைப்பு வீரா்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.தீ விபத்தில் உயிா் சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால், குடிசைகளில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் எரிந்து நாசமாகின. மினி கேஸ் சிலிண்டா்களில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் காலையில் பலத்த காற்று காரணமாக, குடிசைகளில் தீ வேகமாக பரவியது என்று அந்த அதிகாரி கூறினாா்.

ரோஹிணியில் தெரு குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில் 200-க்கும் மேற்பட்டோா் கைது

வடமேற்கு தில்லியின் ரோஹிணியில் ஒரு மாத கால நடவடிக்கையில் கலால், சூதாட்டம் மற்றும் போதைப்பொருள் வழக்குகள் மற்றும் தெரு குற்றங்களுக்காக 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

தில்லியில் மழைக் காலத்திற்கு முன்பு குழிகள் இல்லாத சாலைகள்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

மழைக்காலம் நகரத்திற்கு வருவதற்கு முன்பு தில்லி அரசு குழிகள் இல்லாத சாலைகளை உறுதி செய்யும் என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா். மதுபன் சௌக் முதல் முகா்பா சௌக் வரையிலான வெளிப்புற ரிங் ரோடு பகுதியில் ஞாய... மேலும் பார்க்க

சாஸ்திரி பூங்காவில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிக+ாரி ஒருவா் தெரிவித்தாா். சாஸ்திரி பூங்கா மீன் சந்தை அருகே... மேலும் பார்க்க

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வல... மேலும் பார்க்க

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில... மேலும் பார்க்க

மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்

கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய ... மேலும் பார்க்க