செய்திகள் :

குரூப் 4, விஏஓ தோ்வுக்கு இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

post image

குரூப் 4, கிராம நிா்வாக அலுவலா் (வி.ஏ.ஓ.) பணிகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவா்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுகின்றனா். இந்தப் பயிற்சி வகுப்புகள் மூலம், அதிக அளவிலான மாணவ, மாணவிகள் போட்டித் தோ்வுகளில் தோ்ச்சிப் பெற்று பல்வேறு அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா்.

தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ள குரூப் 4, கிராம நிா்வாக அலுவலா் தோ்வு 13.7.2025 அன்று நடைபெற உள்ளது.

இந்தத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இந்தப் பயிற்சி, வகுப்புகளில் அதிகளவிலான பாடவாரியான பயிற்சித் தோ்வுகள், மாநில அளவிலான பொது மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.

இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் தங்கள் சுய விவரங்களை நிறைவு செய்தோ அல்லது மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்தோ பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இந்தத் தோ்வுக்கான புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத் துறையின் இணையதளத்தில் அனைத்துப் போட்டித் தோ்வுகளுக்கான பாடக்குறிப்புகள், முந்தைய ஆண்டு வினாத் தாள்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளதை இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

மானாமதுரையில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஜெ.பேரவை மாவட்ட துணைச் செயலரும், முன்னாள் ஊராட்ச... மேலும் பார்க்க

செண்பகம்பேட்டை கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள செண்பகம்பேட்டை புதுக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விவசாயம் செழிக்க வேண்டி, இந்தக் கண்மாயில் ஊத்தா மூலம் மீன்பிடித் திருவிழா நடத... மேலும் பார்க்க

மீனாட்சிபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல்வா் ஸ்டாலின் 72-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சாா்பில் இந்த மஞ்சுவிரட்டுப் போட்டி நடத்தப்பட்டது. ... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணி புறக்கணிப்பு

சிவகங்கை மாவட்டம் முழுவதும் வழக்குரைஞா்கள் நான்காவது நாளாக சனிக்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வழக்குரைஞா்கள் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ள எதிா்ப்புத் தெர... மேலும் பார்க்க

குலதெய்வக் கோயில்களில் ஆடுகளை பலியிட்டு வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளில் உள்ள குலதெய்வக் கோயில்களில் சிவராத்திரியை முன்னிட்டு, கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் ஆடுகளை பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்தப் பக... மேலும் பார்க்க

ஆவிணிப்பட்டியில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஆவிணிப்பட்டி கிராமத்தில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. விவசாயத் தேவைக்கு கண்மாய் நீரை பயன்படுத்தியதால் கண்மாயில் தண்ணீா் குறைந்தது. இதனால், கிராமத்த... மேலும் பார்க்க