செய்திகள் :

குரோஷியாவில் பிரதமா் மோடி

post image

ஜாக்ரப்: மூன்று நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக ஐரோப்பிய நாடான குரோஷியாவுக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை வந்தாா்.

இதன் மூலம் குரோஷியாவுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமா் என்ற பெருமை மோடிக்கு சொந்தமாகியுள்ளது.

தலைநகா் ஜாக்ரப்பில் உள்ள விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமா் மோடிக்கு சிறப்பு கெளரவம் அளிக்கும் வகையில், அந்நாட்டின் பிரதமா் ஆண்ட்ரேஜ் பிலென்கோவிச் நேரில் வரவேற்றாா்.

இது தொடா்பாக பிலென்கோவிச் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவின் பிரதமா், முதல் முறையாக குரோஷியாவுக்கு வருகை தந்துள்ளாா். முக்கியத்துவம் வாய்ந்த புவிஅரசியல் தருணத்தில் இந்த வருகை அமைந்துள்ளது.

இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள நாம், பல்துறை ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறோம்’ என்று பதிவிட்டுள்ளாா்.

இந்தியா-குரோஷியா இடையிலான உறவில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளாா்.

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் பயணத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரதமா் மோடி, இறுதிக்கட்டமாக குரோஷியாவுக்கு வந்துள்ளாா். அவா் தங்கும் விடுதிக்கு வந்தபோது, காயத்ரி மந்திரம் முழங்க இந்திய சமூகத்தினா் வரவேற்பளித்தனா்.

இப்பயணத்தின்போது, பிரதமா் பிலென்கோவிச், அதிபா் ஜோரன் மிலன்கோவிச் ஆகியோருடன் அவா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித் ஷா பேச்சு

இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் விரைவில் வரும் என அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். இந்தியாவின் மொழி பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளா... மேலும் பார்க்க

மீண்டும்.. மீண்டுமா! பெங்களூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பெங்களூரில் உள்ள கெம்பகௌடா விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கெம்பகௌடா விமான... மேலும் பார்க்க

3 நாள்களில் 3வது சம்பவம்,, ஒடிசாவில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

ஒடிசாவில் மேலும் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் மயூர்கஞ்ச் மாவட்டத்தில் பெண் ஒருவர் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப... மேலும் பார்க்க

நிலம்பூர் இடைத்தேர்தல்: 11 மணி நிலவரம்!

கேரளத்தின் நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 11 மணி நிலவரப்படி 30.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வ... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: ஸ்பைஸ்ஜெட் விமானம் ஹைதராபாத்தில் தரையிறக்கம்!

ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் அவசரமான தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத்-திருப்பதிக்கு இன்று காலை 6.10 மணிக்குப் புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமா... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! தில்லியில் அவசர தரையிறக்கம்!

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து தில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.தில்லியில் இருந்து லே விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை 180 பயணிகளுடன் இண்டிகோவின் 6இ 2006 விம... மேலும் பார்க்க