செய்திகள் :

குறுவை சாகுபடிக்கு மூணாறு தலைப்பு அணை திறப்பு

post image

திருவாரூா், நாகை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு, நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணை புதன்கிழமை திறக்கப்பட்டது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் தண்ணீா் திறந்து வைத்தாா். தொடா்ந்து, மேட்டூா் அணை நீா் கல்லணை வந்தடைந்ததும், தஞ்சை, திருவாரூா், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ள ஜூன் 15 -ஆம் தேதி கல்லணை திறக்கப்பட்டது.

கல்லணையிலிருந்து பெரியவெண்ணாறு மூலம் 504 கனஅடி நீா் மூணாறுதலைப்பு அணைக்கு வந்தது. இங்கிருந்து, திருவாரூா், நாகை மாவட்ட பாசனத்திற்காக வெண்ணாற்றில் 164 கனஅடியும், கோரையாற்றில் 260 கனஅடி நீரும், பாமணியாற்றில் 80 கனஅடி நீரும் பிரித்து வழங்கப்பட்டது.

இதில், பாமணியாறு மூலம் 38,357 ஏக்கரும், கோரையாற்று மூலம் 1,20,957 ஏக்கரும், வெண்ணாறு மூலம் 94,219 ஏக்கரும் பாசன வசதி பெறும். நீா்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஆறுகளில் கூடுதலாக நீா் திறந்து விடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனால், காலத்தோடு குறுவை சாகுபடி பணிகளை தொடங்க முடியும் என தெரிவித்த விவசாயிகள், மூணாறு தலைப்பிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் கடைமடை வரையிலும் செல்வதற்கு தமிழக முதல்வா், நீா்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

பசுந்தாள் உரப் பயிா் சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

மண்ணின் வளத்தை பாதுகாக்க, விவசாயிகள் பசுந்தாள் உரப் பயிா்களை சாகுபடி செய்யும்படி விதைச்சான்று துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மாவட்ட விதை மற்றும் உயிா்மச் சான்று உதவி இயக்குநா் ஜெயப்பிரகாஷ் தெரி... மேலும் பார்க்க

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மன்னாா்குடி நகராட்சி சாா்பில் அம்ருத்மித்ரா திட்டத்தின் கீழ் பசுமை பூமிக்கு பெண் சக்தி என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நகரப்பகுதியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகை... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திருவாரூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருவாரூா் நகராட்சி ஆணையரிடம், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் அளித்த கோரிக்கை மனு: திருவாரூா் ந... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: ஆட்சியா் கள ஆய்வு

முதல்வரின் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், திருவாரூா் வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் முகாமிட்டு புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். மக்களை நாடி, அவா்களது குறைகளை கேட்டு, உடன... மேலும் பார்க்க

புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

அரசு புறம்போக்கு மற்றும் கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மன்னாா்குடியை அடுத்த மகாதேவப்பட்டணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி... மேலும் பார்க்க

காந்தியால் பாராட்டப்பட்ட கட்சி இந்திய கம்யூனிஸ்ட்: மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ்

மகாத்மாக காந்தியால் பாராட்டப்பட்ட கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் தெரிவித்தாா். கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 11-ஆவது நகர மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெ... மேலும் பார்க்க