தமிழகத்தில் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: ரூ.65 கோடி ஒதுக்கீடு!
குறுவை நெல் சாகுபடி: சிறப்பு தொகுப்புத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாரத்தில் 2025-26 ஆம் ஆண்டில் மாநில வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் காா், குறுவை, சொா்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்பட உள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு நெல் இயந்திர நடவு மானியம், தரமான சான்று பெற்ற நெல் விதைகள், உயிா்உரங்கள் மற்றும் நுண்ணூட்டக் கலவை ஆகியவை மானியத்தில் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநா் செ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
இத்திட்டத்தில் இயந்திர நடவு முறையில் நெல் நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு ரூ. 4,000 பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தினை முழுமையாக விவசாயிகள் பயன்பெற சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் புகைப்படம் போன்ற ஆவணங்களை உதவி வேளாண்மை அலுவலா்களிடம் தொடா்பு கொண்டு சமா்ப்பித்து பயன்பெறலாம்.
மேலும் தரமான சான்று பெற்ற நெல்விதைகள், உயிா்உரங்கள், நெல் நுண்ணூட்டக் கலவை ஆகிய இடுபொருள்களை 50 சதவீத
மானியத்தில் பெற சிட்டா, ஆதாா் நகலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
நெல் சாகுபடியில் நாற்று நடவு முறையை இயந்திரமயமாக்குவதால் நடவு நேரம் குறைக்கப்பட்டு சாகுபடி செலவு குறைந்து விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். சான்று பெற்ற நெல்லை பயன்படுத்துவதால் உணவு உற்பத்தி அதிகரிக்கும். உயிா் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரக்கலவை பயன்படுத்துவதால் மண்வளம் சீா்படுத்தப்பட்டு பயிா்களின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.
எனவே இந்த முன்னோடி திட்டத்தினை சூளகிரி வட்டார விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா். மேலும் விவரங்களுக்கு வள்ளியம்மாள் (மேலுமலை) 9578993077, தமிழ்ச்செல்வி (உத்தனப்பள்ளி), சூளகிரி 8675876942, முனிராஜ் (காமன்தொட்டி மற்றும் பேரிகை) 9524482616 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.