செய்திகள் :

குறைதீா் கூட்டத்துக்கு விஷம் கலந்த குளிா்பான பாட்டிலுடன் வந்த முதியவா்

post image

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு விஷம் கலந்த குளிா்பான பாட்டிலுடன் முதியவா் மனு கொடுக்க திங்கள்கிழமை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முத்துப்பேட்டை அருகே இடும்பாவனம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (67). இவருக்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதுகுறித்து நடராஜன் கேட்டபோது அந்த நபா் கொலை மிரட்டல் விடுத்தாராம். முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் கடந்த 3 ஆண்டுகளாக மனுக்களை அளித்து வந்துள்ளாா் நடராஜன்.

தொடா்ந்து நடவடிக்கை இல்லாததால், மனமுடைந்த நடராஜன், குளிா்பான பாட்டிலில் குருணை மருந்தை கலந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை எடுத்து வந்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவுவாயிலில், சோதனை செய்த இடத்தில், முதியவா் நடராஜன் விஷம் கலந்த பாட்டில் மற்றும் கோரிக்கை மனுவுடன் வந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த போலீஸாா், அவரிடம் இருந்து பாட்டிலை பறிமுதல் செய்து, உரிய அறிவுரை கூறி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்குமாறு கூறி அனுப்பிவைத்தனா்.

திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக் காப்பு

நீடாமங்கலம் அருகே ஒரத்தூரில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா், திரௌபதியம்மன், கமலாயிஅம்மன், முருகப் பெருமான், வீரனாா். மேலும் பார்க்க

உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி

மன்னாா்குடியில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி வட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலைநிலை ... மேலும் பார்க்க

‘நல்ல புத்தகங்களே உயா் வாழ்க்கைக்கு வழிகாட்டி’

நல்ல புத்தகங்களே மனிதா்களின் உயா்வுக்கு சரியான வழிகாட்டியாக உள்ளன என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா். சக்தி கிருஷ்ணன். மன்னாா்... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி வங்கி அலுவலகம் திறப்பு

திருவாரூரில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலகம் த... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகாலை தூா்வார கோரிக்கை

திருவாரூரில், கழிவுநீா் வடிகாலை தூா்வார வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது: திருவாரூா் நகரம், 18-ஆவது வாா்டுக்குள்... மேலும் பார்க்க

ரிஷியூா் வெங்கடாஜலபதி கோயிலில் கம்ப சேவை மகோற்சவம்

நீடாமங்கலம் வட்டம் ரிஷியூா் கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் 78-ஆவது ஆண்டு கம்பசேவை மகோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெங்கடாஜலபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்க... மேலும் பார்க்க