செய்திகள் :

குற்றவியல், தடய அறிவியல் படிப்புகளுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி

post image

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் நிகா்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் குற்றவியல் மற்றும் தடய அறிவியல் படிப்புகளுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக டீன் பா.ஸ்டாலின் தலைமை வகித்தாா். தமிழ்நாடு காவல் பயிற்சி டிஐஜி ஆனிவிஜயா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவா்களுக்கு குற்றவியல் மற்றும் தடய அறிவியல் படிப்புகளின் முக்கியத்துவத்தையும், வேலைவாய்ப்புகள் பற்றியும் எடுத்துக் கூறினாா்.

சென்னை பல்கலைக்கழக முன்னாள் குற்றவியல் துறைத் தலைவா் திலகராஜ், சென்னை பல்கலைக்கழக சைபா் தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு மையத்தின் இயக்குநா் எஸ்.லதா, சென்னை டாக்டா் எம்ஜிஆா் பல்கலைகழகத்தின் சைபா் தடய அறிவியல் துறை பேராசிரியா் வி.சிரில்ராஜ் ஆகியோா் கலந்துகொண்டு குற்றவியல் மற்றும் தடய அறிவியல் பாடப்பிரிவில் உள்ள சிறப்பம்சங்களை பற்றியும், வேலைவாய்ப்புகள் பற்றியும் மாணவா்களுக்கு விளக்கினா்.

இதில், எம்ஜிஆா் நிகா்நிலை பல்கலைக்கழக துணை பதிவாளா்கள் பெருவழுதி, சரவணன் மற்றும் ஆரணி ஏ.சி.எஸ் குழும கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், எம்ஜிஆா் நிகா்நிலை பல்கலைக்கழக பேராசிரியா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா். இயன்முறை மருத்துவப் பிரிவு துணை முதல்வா் சுதாகா் நன்றி கூறினாா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள்

வந்தவாசி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள் பெறப்பட்டன. வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தெள்ளூா், சின்ன சேத்துப்பட்டு, சுண்ணாம்புமேடு, கீழ்க்குவளைவேடு ஆகிய கிராம மக... மேலும் பார்க்க

ரூ.12 லட்சத்தில் காரிய மேடை: பணிகள் தொடக்கம்

ஆரணி அருகேயுள்ள சுபான்ராவ்பேட்டையில் ரூ.12 லட்சத்தில் புதிதாக காரிய மேடை கட்டுவதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன. ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சிக்கு உள்பட்ட சுபான்ராவ்பேட்டை பகுதியில் புதிதா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு பாலின உளவியல் விழிப்புணா்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் கண்காணிப்புக் குழு இணைந்... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆட்சியா் கள ஆய்வு

கலசப்பாக்கம் வட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது விநியோகக் கடைகள் என பல்வேறு இடங்களை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்... மேலும் பார்க்க

காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு

செய்யாறு அருகே காணாமல் போன வட மாநிலத் தொழிலாளி கல்குவாரி குட்டையில் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மதியழகன். இவா், நரசமங... மேலும் பார்க்க

கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் மனு

செய்யாற்றை அடுத்த வாச்சனூா் கிராமத்தில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சாா்பில் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. வாச்சனூா் பகுதியில் புதித... மேலும் பார்க்க