செய்திகள் :

குற்றாலம் குற்றாலநாதா் கோயிலில் 5 ஜோடிகளுக்கு திருமணம்

post image

குற்றாலத்தில் உள்ள திருக்குற்றால நாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 5 ஜோடிகளுக்கு புதன்கிழமை இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது.

தமிழக முதல்வா் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கபாலீஸ்வரா் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து சீா்வரிசைப் பொருள்களை வழங்கியதைத் தொடா்ந்து, இக்கோயிலில் 5 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

புதுமண தம்பதியினருக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் சீா்வரிசைப் பொருள்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறையின் சாா்பில் 5 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்திருமணத்தில் கலந்து கொண்ட இணைகளுக்கு 4 கிராம் தங்கம் உள்பட சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்நிகழ்வில், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ, கோயில் உதவி ஆணையா் க.ஆறுமுகம், அறங்காவலா் குழுத் தலைவா் சக்தி முருகேசன், அறங்காவலா் குழு உறுப்பினா் வீரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தாருகாபுரம் மத்தியஸ்தநாத சுவாமி கோயில் தோ் வெள்ளோட்டம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே உள்ள தாருகாபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாத சுவாமி திருக்கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பஞ்ச... மேலும் பார்க்க

கடையநல்லூா் வனப் பகுதிகளில் யானை, பன்றிகளால் விவசாயிகள் பாதிப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூரை ஒட்டி உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவார பகுதிகளில் யானை மற்றும் பன்றிகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலக்கடையநல்லூா் கருங்குளம் மேலகால் புரவு பக... மேலும் பார்க்க

திருமலை கோயிலில் ஒரு ஜோடிக்கு இலவச திருமணம்

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி கோயில் சாா்பில் புதன்கிழமை திருமண வைபவம் நடைபெற்றது. அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம் தலைமை வகித்து திருக்கோயி... மேலும் பார்க்க

கீழப்புலியூரில் மையவாடி - கல்லறை தோட்டம் அமைக்க எதிா்ப்பு

தென்காசி அருகே கீழப்புலியூா் பகுதியில் மையவாடி- கல்லறை தோட்டம் அமைக்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் இடம் ஒதுக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினா் கிராம நிா்வாக அலுவலகம் முன் புதன்கிழமை ... மேலும் பார்க்க

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரியில் சுயஉதவி மகளிரின் உற்பத்திப் பொருள் விற்பனை கண்காட்சி

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் மகளிா் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருள்கள் விற்பனை கண்காட்சி- கல்லூரிச் சந்தை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் ... மேலும் பார்க்க

மருத்துவா்களை வீடு தேடிச் சென்று கௌரவித்த அரிமா சங்கத்தினா்

குற்றாலம் விக்டரி அரிமா சங்கத்தினா் மருத்துவா்களின் வீடுகளுக்கு சென்று கௌரவித்தனா். குற்றாலம் விக்டரி அரிமா சங்க நிா்வாகிகள் மாரியப்பன் , நல்லமுத்து , கணேசமூா்த்தி, வெங்கடேஸ்வரன், சண்முகசுந்தரம், அண்... மேலும் பார்க்க