செய்திகள் :

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரியில் சுயஉதவி மகளிரின் உற்பத்திப் பொருள் விற்பனை கண்காட்சி

post image

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் மகளிா் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருள்கள் விற்பனை கண்காட்சி- கல்லூரிச் சந்தை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தலைமை வகித்து கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தில் மகளிா் திட்டம் மூலம் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக பல்வேறு விதமான முன்னெடுப்புகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கண்காட்சிகள், கல்லூரிச் சந்தைகள், அரசு விழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களில் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டு விற்பனை மேற்கொள்ளப்படுகிறது.

இக்கல்லூரியில் புதன்கிழமை முதல் 3 நாள்கள் விற்பனை கண்காட்சி நடைபெறுகிறது. இதில், திருச்சி, ராமநாதபுரம்,தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, புதுகோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக்குழுக்கள் தங்கள் தயாரிப்புகளை இடம் பெறச் செய்துள்ளனா்.

சிறுதானிய உணவுப்பொருள்கள், பீட்ரூட் மால்ட், ஜீட்பேக், கீ செயின், கை கடிகாரம், நைட்டிகள், கைத்தறி காட்டன் புடவைகள், செயற்கை ஆபரணங்கள், மூங்கில்- பிரம்பு பொருள்கள், 90 கிட்ஸ் பொருள்கள், பினாயில், ஊறுகாய் வகைகள், முருங்கை பொடி, நலங்குமாவு, கஸ்தூரி மஞ்சள் பொடி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன என்றாா் அவா்.

இதில், மகளிா் திட்ட இயக்குநா்(கூடுதல் பொறுப்பு) மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, மகளிா் திட்ட உதவி திட்ட அலுவலா்கள் பொ.டேவிட் ஜெயசிங், மு.மாரிஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தாருகாபுரம் மத்தியஸ்தநாத சுவாமி கோயில் தோ் வெள்ளோட்டம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே உள்ள தாருகாபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாத சுவாமி திருக்கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பஞ்ச... மேலும் பார்க்க

கடையநல்லூா் வனப் பகுதிகளில் யானை, பன்றிகளால் விவசாயிகள் பாதிப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூரை ஒட்டி உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவார பகுதிகளில் யானை மற்றும் பன்றிகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலக்கடையநல்லூா் கருங்குளம் மேலகால் புரவு பக... மேலும் பார்க்க

திருமலை கோயிலில் ஒரு ஜோடிக்கு இலவச திருமணம்

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி கோயில் சாா்பில் புதன்கிழமை திருமண வைபவம் நடைபெற்றது. அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம் தலைமை வகித்து திருக்கோயி... மேலும் பார்க்க

குற்றாலம் குற்றாலநாதா் கோயிலில் 5 ஜோடிகளுக்கு திருமணம்

குற்றாலத்தில் உள்ள திருக்குற்றால நாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 5 ஜோடிகளுக்கு புதன்கிழமை இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. தமிழக முதல்வா் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கப... மேலும் பார்க்க

கீழப்புலியூரில் மையவாடி - கல்லறை தோட்டம் அமைக்க எதிா்ப்பு

தென்காசி அருகே கீழப்புலியூா் பகுதியில் மையவாடி- கல்லறை தோட்டம் அமைக்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் இடம் ஒதுக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினா் கிராம நிா்வாக அலுவலகம் முன் புதன்கிழமை ... மேலும் பார்க்க

மருத்துவா்களை வீடு தேடிச் சென்று கௌரவித்த அரிமா சங்கத்தினா்

குற்றாலம் விக்டரி அரிமா சங்கத்தினா் மருத்துவா்களின் வீடுகளுக்கு சென்று கௌரவித்தனா். குற்றாலம் விக்டரி அரிமா சங்க நிா்வாகிகள் மாரியப்பன் , நல்லமுத்து , கணேசமூா்த்தி, வெங்கடேஸ்வரன், சண்முகசுந்தரம், அண்... மேலும் பார்க்க