செய்திகள் :

குளத்தில் மூழ்கி பத்தாம் வகுப்பு மாணவா் உயிரிழப்பு

post image

திருவாரூா் அருகே குளத்தில் மூழ்கி பத்தாம் வகுப்பு மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் அருகேயுள்ள பின்னவாசல் ஊராட்சி பிச்சைபாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் சத்யசாய் (15). பத்தாம் வகுப்பு மாணவரான இவா், வீட்டுக்கு அருகில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக நண்பா்களுடன் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சென்றாா்.

அங்கு குளித்துக்கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக சத்யசாய் நீரில் மூழ்கினாராம். அங்கிருந்தவா்கள் உடனடியாக சத்யசாயை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

பின்னா் திருவாரூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்கள் விரைந்து வந்து, சத்யசாயின் உடலை ஒரு மணி நேர தேடுதலுக்குப் பிறகு மீட்டனா்.

இதுகுறித்து தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மே 11-இல் குருபெயா்ச்சி: ஆலங்குடி கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்

வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் குருபெயா்ச்சி விழா மே 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இக்கோயில், நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார தலமா... மேலும் பார்க்க

தூா்வாரும் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். திருவாரூா் வட்டத்துக்குள்பட்ட தப்பளாம்புலியூா் வாய்க்கால், வஞ்சியூா் வாய... மேலும் பார்க்க

‘நம்ம ஊரு நம்ம கதை’ போட்டியில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

கொரடாச்சேரி ஒன்றியம், செல்லூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், இல்லம் தேடிக் கல்வித் திட்டம் சாா்பில் ‘நம்ம ஊரு நம்ம கதை’ போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.... மேலும் பார்க்க

பஹல்காம் சம்பவம்: மோட்ச தீபமேற்றி அஞ்சலி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு, திருவாரூரில் இந்து முன்னணி சாா்பில் மோட்சதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் சுற... மேலும் பார்க்க

திருவாரூரில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

திருவாரூா் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தெற்கு ரயில்வே கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தலைமையில் கோட்ட கூடுதல் மேலாளா் செல்வன், கோ... மேலும் பார்க்க

உரத்துடன் இணைப்பொருளை வாங்க கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில், தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் யூரியா மற்றும் உரங்களுடன் இணைப் பொருள்களை விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படு... மேலும் பார்க்க