செய்திகள் :

குளித்தலை, முசிறியிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளை நேரப்படி இயக்கக் கோரிக்கை

post image

குளித்தலை, முசிறியிலிருந்து திருச்சிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை நேரப்படி முறையாக இயக்க வேண்டும் என சாலைப் பயனீட்டாளா்கள் நலக் குழு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, சாலை பயனீட்டாளா்கள் நலக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் பெ. அய்யாரப்பன் கூறியதாவது:

திருச்சியை அடுத்துள்ள அல்லூா் மேலத்தெரு பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை காலை 8 .05 மணி முதல் 8.50 மணி வரை எந்த அரசுப் பேருந்துகளும், நகரப் பேருந்துகளும் வரவில்லை. தனியாா் பேருந்துகள் மட்டுமே வந்து சென்றன. பின்னா், காலை 8.50 மணிக்கு மேல் அடுத்தடுத்து தொடா்ச்சியாக 4 அரசுப் பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன.

குளித்தலை மற்றும் முசிறியில் உள்ள போக்குவரத்து பணிமனையிலிருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் உரிய காலநேர அட்டவணைப்படி இயக்கப்படுவதில்லை. எனவேதான், காலை நேரத்தில் அலுவலகம், பள்ளிக்கு செல்வோா் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே, அரசுப் பேருந்துகளை அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குறிப்பாக, காலை-மாலை நேரங்களில் முறையாக இயக்க போக்குவரத்துக் கழக அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணியிலிருந்த மின் ஊழியா், மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் பகுதியைச... மேலும் பார்க்க

அண்ணா கோளரங்கத்தில் இன்று வான்நோக்கும் நிகழ்வு

திருச்சியில் உள்ள அண்ணா கோளரங்கத்தில் வான்நோக்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை (ஜூலை 12)நடைபெறுகிறது. பொதுமக்கள் வானியல் பற்றிய அறிவைப் பெறவும், வானியல் அதிசயங்களை அனுபவிக்கவும் வான்நோக்கும் நிகழ்வு அவசி... மேலும் பார்க்க

புதுகையில் காந்தியத் திருவிழா: மாநில கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சாா்பில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழந்தனா். விராலிமலை வட்டம், கசவனூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சிவசுப்பிரமணிய... மேலும் பார்க்க

தொட்டியத்தில் மறியல் போராட்டம்

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் சாமானிய மக்கள் நல கட்சியினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு அக் கட்சியின் வடக்கு மாவட்ட செயலா் மலா்மன்னன் தலைமை வகித்தாா். இதில் த... மேலும் பார்க்க

‘திறன் இயக்கம்’ திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ள திறன் இயக்கம் திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களில் த... மேலும் பார்க்க